Thursday, June 19, 2014

ஆதிசங்கரர் அருளிய அற்புத கேள்வி பதிலைப் படியுங்கள்

ஆதிசங்கரர் அருளிய அற்புத கேள்வி பதிலைப் படியுங்கள். ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.
மரியாதைக்குரியவர் யார்? -
யாரிடமும் எதையும் வேண்டாதவர்.
எது சுகம்? - 
நல்லவர்களின் நட்பு.
உலகை வெல்ல எவரால் முடியும்? - 
உண்மையும் பொறுமையும் உடையவரால்.
எவரை தேவர்களும் வணங்குவார்கள்? - 
கருணை உடையவரை.
மனிதனுக்கு எது அலங்காரம்? -
நல்ல குணங்கள்.
பேச்சிற்கு அழகு எது? -
உண்மை.
கடவுளுக்கு யாரிடம் பிரியம்? - 
தானும் கவலைப்படாமல், பிறருக்கும் கவலை உண்டாக்காதவரிடத்தில்.
தெய்வம் என்பது என்ன? - 
அவரவர் செய்த புண்ணியம்.
உடலுக்கு பாக்கியம் எது? - 
ஆரோக்கியம்.
பிரத்யக்ஷ தேவதை(கண்கண்ட தெய்வம்) யார்? -
தாய்.
பூஜிக்க வேண்டிய குரு யார்? -
தந்தை.

No comments:

Post a Comment