Tuesday, September 16, 2014

விநாயகரை இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்பவர்கள் ஆனந்த உலகத்தை அடைவார்கள்

விநாயகரை இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்பவர்கள் ஆனந்த உலகத்தை அடைவார்கள்


ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி உலகம் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. படைப்புக்கடவுள் பிரம்மா சத்தியலோகத்திலும், விஷ்ணு வைகுண்டத்திலும், சிவன் கயிலாயத்திலும், அம்பிகை மணித்வீபத்திலும், முருகன் ஸ்கந்த லோகத்திலும் ஆட்சி புரிகின்றனர். விநாயகரின் இருப்பிடமான ஆனந்தலோகத்தை வடமொழி ஸ்லோகம், "ஆனந்தமயா தேவஸ்து ஸ்வானந்தே' என்று குறிக்கிறது. "ஆனந்த உலகம், ஆனந்த புவனம்' என்றும் இதற்கு பெயருண்டு. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் மனித உடம்பிலுள்ள ஐந்து கோசங்களில், ஆனந்தமய கோசத்திற்கு தலைவராக விநாயகர் இருப்பதாக யோகசாஸ்திரம் கூறுகிறது. விநாயகரை இஷ்ட தெய்வமாக வழிபாடு செய்பவர்கள் ஆனந்த உலகத்தை அடைவார்கள் என்பது ஐதீகம்

No comments:

Post a Comment