Monday, October 20, 2014

சரஸ்வதி மந்திர மகிமை

பெண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களை, `வித்தை' என்று சொல்வார்கள். சரஸ்வதிக்கு உரிய மந்திரத்தை, `சிந்தாமணி வித்தை' என்று கூறுவர். சரஸ்வதி தேவியின் இந்த மந்திரம் அடியவர் நினைத்ததை கொடுக்கும் ஆற்றல் உடையது. ஸ்ரீஹரன் என்பவர் ஓர் அரசவைப் புலவராகத் திகழ்ந்தார்.

வேற்று நாட்டைச் சேர்ந்த ஒரு புலவர் ஸ்ரீஹரனைத் தனது திறமையால் தோல்வி அடையச் செய்து விட்டார். அதனால் மனமுடைந்த ஸ்ரீஹரன் மனம் உடைந்து இறந்தார். அவர் இறப்பதற்கு முன்னால் தன் மனைவி மாமல்லா தேவிக்கு சரஸ்வதி மந்திரமான சிந்தாமணி வித்தையை உபதேசித்தார்.

ஸ்ரீஹரன் இறந்த சமயத்தில் அவரது மகன் ஸ்ரீஹர்ஷர் குழந்தையாக இருந்தார். ஸ்ரீஹர்ஷரின் தாய், தன் மகனைப் பெரும் புலவனாக்க விரும்பினாள். குழந்தை தன் தாயின் மார்பில் பிஞ்சுக் கால்களால் உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது மாமல்லா தேவி குழந்தைக்கு, சிந்தாமணி மந்திரத்தை உபதேசித்தாள்.

குழந்தை அம்மந்திரத்தைத் தொடர்ந்து கூறியது. மந்திரங்களைச் பிணத்தின் மீது நின்று சொன்னால் விரைவில் பயன் கிட்டும் என்று வாமாசார நெறியில் கூறுவார்கள். அதனை அறிந்திருந்த மாமல்லா தேவி குழந்தை அறியாதபடி, தனது கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விட்டாள்.

குழந்தை எதுவும் தெரியாமல் தொடர்ந்து சிந்தாமணி மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து சரஸ்வதி தேவி ஸ்ரீஹர்ஷருக்கு காட்சி கொடுத்துக் குழந்தையை மாமேதையாக ஆக்கி விட்டாள். சித்திகளையும் கொடுத்தாள்.

அதன் பயனாக ஸ்ரீஹர்ஷரின் தாய் உயிர் பெற்று எழுந்தாள். குழந்தை சிறு வயதிலேயே பெரும் புலவராகி அரசவைக்குச் சென்றார். தந்தையை வென்ற புலவர் உள்ளிட்ட அனைவரையும் எளிதில் வென்று தலைமைப் புலவராக உயர்ந்தார்.

No comments:

Post a Comment