Monday, October 20, 2014

எட்டு சரஸ்வதிகள்

நவதுர்க்கை, அஷ்ட லட்சுமிகள் போல சரஸ்வதி அவதாரங்களில் எட்டு சரஸ்வதிகள் உள்ளனர். அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை அவளுடைய கொலு மண்டப அரங்கத் தில் எடுத்துப் பாடியவர்களே எட்டு சரஸ்வதிகள் தான்!

ஸ்ரீசக்ரத்தின் எட்டா வது சுற்றாகிய எட்டுக் கோணமுள்ள சர்வரோக ஹர சக்ரத்தில் இந்த 8 சரஸ்வதிகளும் இருப்பார்கள். குளிர்ச்சியான, வெண்ணிறமுள்ள இனிய தோற்றத்துடன் விளங்குவார்கள். இந்த 8 சரஸ்வதிகளை `ரகஸ்ய யோகினிகள்' என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள்.

பக்தர்களுக்கு சிறந்த பேச்சாற்றலை அருளும் பணியை தேவி இவர்களிடம் அளித்திருக்கிறாள்.இவர்களின் அருளை பெற்றால் ஞானமும், பேச்சாற்றலும் அடையலாம். இவர்களின் அருள் கிடைத்து விட்டால், பராசக்தியின் பேரருளும் எளிதில் கிட்டும்.

No comments:

Post a Comment