Monday, October 20, 2014

தீபாவளியன்று மாமிசம் உண்ணாதீர்கள்

சில வீடுகளில் மறைந்த முன்னோர்களான பிதுர்கள் வருவதாக ஒரு ஐதீகம். நரகத்தில் இடப்பட்டவர்கள் விடுதலை பெற்று வீடுகளுக்கு வருவதாக நம்பி உணவு படைப்பார்கள். இதனால் இத்திருநாளுக்கு நரக சதுர்த்தி என்ற சிறப்பு பெயரும் உண்டு.

அசைவம் வேண்டாம் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி பாவச் செயல்களை விடுத்து தர்மசிந்தனையோடு விளங்க தீபாவளி அன்று ஆலயம் சென்று வழிபடுவதும் நல்லது. ஆனால் பலர் தீபாவளியை தவறான முறையில் கொண்டாடி தீபாவளியின் தெய்வத் தன்மையை கெடுத்து விடுகின்றனர்.

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறி மது அருந்தி மாமிசம் உண்டு மகிழ்வதாக கூறி தாங்களே நரகாசுரர்களாக மாறிவிடுவது கவலைக்குரிய ஒன்றாகும். புனிதமான தீபாவளி திருநாளில் தீய பழக்கங்களை கைவிட்டு தூய உணவை சாப்பிட்டு களித்திருக்க வேண்டும்.

மது அருந்துதல் மாமிசம் உண்ணுதல், பலவித கேளிக்கைகளில் ஈடுபடுதல், அசுர குண இயல்புகளாகும். கடவுளை மறந்து வாழ்பவர்கள் பலவித துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டவே நரகாசுரன் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. எனவே தீபாவளியன்று மது மாமிசம் உண்பதை நிறுத்தி இறை பக்தியோடு வாழ வேண்டும்

No comments:

Post a Comment