Monday, October 20, 2014

ஆயுதபூஜை

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் சரஸ்வதி பூஜை என்ற ஆயுத பூஜை எல்லாப் பகுதி மக்களாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடப்படுகிறது. அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலம் ஆயுதபூஜை தவறாமல் செய்கின்றனர்.

பிற சமயத்தினரின் நிறுவனம் என்றாலும் தொழிலாளர்கள் ஆயுத பூஜையை நடத்துகின்றனர். பிற சமயத்தினரும் பங்கேற்று மகிழ்கின்றனர். அவ்வகையில் கலைமகள் விழாவான ஆயுதபூஜை சமய ஒருமைப்பாட்டுக்கும் உதவுகிறது.

மகாநவமியில் புத்தகம், எழுதுகோல், ஆயுதங்கள் ஆகிய அனைத்திற்கும் வழிபாடுகள் செய்கிறோம். பொரி, அவல், கடலை, சர்க்கரை போன்ற எளிய நிவேதனங்களை சரஸ்வதி ஏற்று மகிழ்கிறாள். குழந்தைகளுக்கு கல்வி தொடங்க விஜயதசமி மிகவும் உகந்த நாள் ஆகும். அன்று தொடங்கும் பணிகள் யாவும் வெற்றியுடன் நிறைவடையும் என்பது நம்பிக்கை.


பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment