Sunday, January 11, 2015

கடவுள் கோபித்துக் கொள்வாரா?

கடவுள் கோபித்துக் கொள்வாரா?
துறவி ஒருவரிடம் சிஷ்யன் கேட்டான். ''குருவே! கடவுளை 
வணங்காதவர்களை கடவுள் கோபித்துக் கொள்வாரா? அதற்கு 
துறவி, ''சிஷ்யா! ரயிலில் தொலைதூரப் பயணம் மேற்
கொண்டிருக்கிறாய். உனக்கு எதிரில் அமர்ந்து ஒருவர் 
பயணம் செய்கிறார். அவருடன் நீ பேசாவிட்டால், அவருக்கு 
ஒன்றும் ஆகிவிடாது. அனுபவம்மிக்க அவரிடம் பேசினால், 
'ரயில் எங்கே நிற்கும், அங்கே உணவு கிடைக்குமா? நீ போக 
வேண்டிய ஊருக்கு எப்போது போய்ச் சேரலாம்?' இப்படிச் 
சில செய்திகளை நீ தெரிந்து கொள்வதால், உனக்குத்தானே பயன்!
கடவுள் என்பவர் உன் வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடன் 
பயணம் செய்யும் ஓர் அனுபவ சாலி. அவரிடம் நீ பல 
விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே? அவரை வணங்குவதால் 
அமைதி, நிம்மதி, இன்பம் ஆகியவை கிடைக்கின்றன. கடவுளை
வழிபடுவது உன் நன்மைக்கு தானே தவிர, நீ வணங்குவதாலோ 
அவருக்கு எந்தப் பலனும் இல்லை... அதனால் தன்னை 
வணங்காதவர்களை கடவுள் ஒருபோதும் கோபித்துக்
கொள்வதில்லை!

No comments:

Post a Comment