Wednesday, February 18, 2015

அமாவாசையில் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, கர்ம சனி செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்

அமாவாசையில் செய்ய வேண்டிய அற்புத பரிகாரம்
ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, கர்ம சனி மற்றும் சனி திசை அல்லது புத்தி நடப்பவர்கள், அடிக்கடி விபத்துக்களை சந்திப்பவர்கள்,மரண பயம் உள்ளோர் மற்றும் அனைத்து வித சனி சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளோரும் இந்த எளிய ஆனால் மிக சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரத்தை அமாவாசை அன்று செய்வதன் மூலம், நிவர்த்தி செய்து கொள்ளலாம்-எம்மிடம் வரும் பலர் செய்து கை மேல் பலன் கண்ட முறைகள் இவை.
இதை செய்ய உகந்த நேரம் அமாவாசை நாள் மாலை ஐந்து முதல் இரவு பத்து வரை
முறை : உங்கள் உடலை (உயரத்தை) கருப்பு நிற நூலால் அளந்து கொள்ளவும். ஒரு இரும்பு சட்டியில் கடுகு எண்னை ஊற்றி அதில் அந்த நூலை போட்டு ஒரு மணி நேரம் ஊர வைக்கவும். பின்பு அந்த எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி (நூலை எறிந்து விடவும்) அந்த இரும்பு சட்டி, மற்றும் 14 மண் அகல் விளக்குகள் எடுத்து கொண்டு சனீஸ்வரர் கோவில் சென்று அதில் ஏழு விளக்குகளில் அந்த எண்ணையை ஊற்றி விளக்கேற்றவும்-பின்பு அவர் சன்னதியை ஏழு முறை சுற்றி விட்டு அதே கோவிலில் உள்ள விநாயகரை கடைசியாக பார்த்து விட்டு வெளியேறவும்.இரும்பு சட்டியை கோவில் வாசலில் பிச்சை பெறுவோருக்கு கொடுத்து விடவும்-பின்பு அரச மரம் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை தொடாமல் வணங்கி, அதன் வேறுக்கு சிறிது பால் கலந்த நீர் ஊற்றி அதன் கீழே மீதமுள்ள ஏழு விளக்குகளையும் ஏற்றி விட்டு, திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும். நேராக வீட்டிற்கு வந்தால் மட்டுமே முழு பயன் உடனடியாக கிட்டும். இதை ஒவ்வொரு அமாவாசையும் செய்யலாம். கோவிலில் நுழைந்தது முதல் அரச மரத்திற்கு விளக்கேற்றும் வரை மனதினுள் 
"ஓம் ஷம் ஷனைச்சராய நமஹ்" 
மந்திரம் உச்சரித்து கொண்டே இருக்கவும்-மறு நாள் முதற் கொண்டு உங்கள் வாழ்வின் நிகழ்வுகளில் வரும் மாற்றங்களை உணர முடியும். செய்து பயன் பெறுங்கள்.

No comments:

Post a Comment