Thursday, August 27, 2015

அமாவாசை, பவுர்ணமி இரண்டில் சிறப்பாக வணங்க தனித்தனி தெய்வங்கள் உள்ளனவா?

அமாவாசை, பவுர்ணமி இரண்டில் சிறப்பாக வணங்க தனித்தனி தெய்வங்கள் உள்ளனவா?
தேய்பிறையின் முடிவு அமாவாசை. வளர்பிறையின் முடிவு பவுர்ணமி. சிவம் என்பது ஒடுங்குதல்(தேய்தல்) தத்துவம். சக்தி என்பது விரிதல்(வளர்தல்) தத்துவம். விதை நிலையில் உயிர் சிவமாக ஒடுங்கி இருக்கிறது. அதே விதை வளர்ந்து மரமாகி விரியும் போது சக்தி பெருகுகிறது. இதன் குறியீடாகவே சிவராத்திரியை ஒரு நாளும்(ஒருமை), நவராத்திரியை ஒன்பது நாளும்(பன்மை) கொண்டாடுகிறோம். அமாவாசையில் சிவனையும், பவுர்ணமியில் அம்பிகையையும் வழிபடுவது சிறப்பு.

No comments:

Post a Comment