Thursday, August 27, 2015

தெய்வங்கள் கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?

தெய்வங்கள் கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?
ஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு பெயருண்டு. அபய முத்திரை என்பது "பயப்படாதே! உடன் உடனிருந்து காப்பாற்றுகிறேன்' என்பதையும், வரதமுத்திரை என்பது, "உன் விருப்பத்தைக் கேள். வரம் தருகிறேன்' என்பதையும் குறிக்கிறது. தட்சிணாமூர்த்தி காட்டும் ஞானமுத்திரை என்பது கட்டை விரலின் அடியில் ஆள்காட்டி விரலை வைத்து, மற்ற மூன்று விரல்களையும் மேல்நோக்கியவாறு இருப்பதாகும். இதில் கட்டை விரல் இறைவன். ஆள்காட்டி விரல் மனிதன். மற்ற மூன்று விரல்களும் உலக வாழ்வின் ஆசாபாசம், இன்பம், துன்பத்தை குறிக்கும். இன்ப துன்பத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி மனிதன் கடவுளைச் சரணடைந்தால் பேரின்பம் உண்டாகும் என்பதே இதன் தத்துவம். இப்படி ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்தனி தத்துவங்கள் இருக்கின்றன.

No comments:

Post a Comment