Thursday, August 27, 2015

சஷ்டி விரதத்தன்று உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?கோவில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?

சஷ்டி விரதத்தன்று உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?
விரதம் என்றாலே உடலை வருத்தி கடவுள் மீது பக்தி செலுத்துவது தான். உப்பில்லாமல், சோறு இல்லாமல் பட்டினி இருப்பதே விரதம். இதன் மூலம், ஒவ்வொரு விநாடியும் உடலும், மனமும் விழிப்புடன் இருக்கும். அதாவது சுவாமியின் நினைவிலேயே இருப்பது, சுவாமியின் அருகிலேயே வாசம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறோமோ அது எளிதில் கைகூடும்.

* கோவில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
மூன்று முறை பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தடியில் ஐந்து முறை வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment