Wednesday, September 30, 2015

இறைவனை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போம்

சோடசோபசாரம் ( தேவதை) சோடசம்
வட மொழியில் 16 பற்றிப் பார்ப்போம்
==================================
1. தூபம் - அக்னிதேவன்
2. மகா தீபம் - சிவன்
3. நாக தீபம் - சக்தி
4. ரிஷிப தீபம் - தர்ம தேவதை
5. புருஷாமிருக தீபம் - விஷ்ணு
6. பூர்ணகும்பம் - ருத்ரன்
7. 5 தட்டு தீபம் - பஞ்சபிரம்ம தேவதைகள்
8. நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரம்
9. மேருதீபம் - 12 சூரியர்கள் ( 12 ராசிகள்)
10. விபூதி - ஸ்ரீ பரமசிவம்
11. கண்ணாடி - சூரியன்
12. குடை - சந்திரன்
13. சாமரம் - மகாலட்சுமி
14. விசிறி - வாயு
15. ஆலவட்டம் - பிரம்மன்
16. கற்பூரம் - அக்னி
இறைவனை வழிபடும் முறை பற்றிப் பார்ப்போம்
==========================================
1. அபிஷேகம் ( நீர், பால், தயிர்,சந்தனம்,தேன்,பன்னீர்,இளநீர்,திரவியபொடி,விபூதி,கரும்புச்சாறு,போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து இறைவனை வழிபடுதல் ஆகும்)
2. அழகு செய்தல் ( பெருமானுக்கு சந்தனத்தால் காப்பு செய்தல்,திருநீறால் காப்பு செய்தல்,அன்னத்தால் காப்பு செய்தல்,ஆடை, ஆபரணங்கள் அனிவித்தல், பிறை,திருநீறு பட்டை அனிவித்தல்,முகம் பாவனை செய்தல், மாலைகள் சாத்துதல் போன்றவைகள் ஆகும்
)
3. அர்ச்சனை ( மலர்களால் அர்ச்சனை செய்தல், விபூதியால் அர்ச்சனை செய்தல், குங்குமத்தால் அர்ச்சனை செய்தல், வேதங்களால் அர்ச்சனை செய்தல்,மந்திரங்களால் அர்ச்சனை செய்தல், திருமுறைகளால் அர்ச்சனை செய்தல், அஷ்டோத்திரம் ( 108) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் சகஸ்ரநாமம் ( 1008) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் போன்றவை ஆகும்)
4. நைவேத்யம் ( பஞ்சாமிர்தம்,சுத்தஅன்னம்,சுண்டல்,பழங்கள்,சக்கரைப் பொங்கல்,வெண் பொங்கல், பாசிப்பயிறு பாயாசம்,போன்றவை செய்தல் ஆகும்)
5. ஆராதனை ( 16 தீப வகைகளை வைத்து பெருமானுக்கு அர்ச்சித்தல் ஆகும்)
6. திருவிழாக்கள் ( திருவாதிரை, பிரதோசம்,கல்யாண உற்சவம்,ஆருத்ரா தரிசனம்,அமாவாசை,பௌர்ணமி, மகாசிவராத்திரி,மாதசிவராத்திரி, போன்றவைகளை கொண்டாடுதல் ஆகும்)
கோவில் ஆராதனை 5 தொழில்
புரிதலை பற்றிப் பார்ப்போம்
===========================
1. திருமுழுக்கு - படைத்தல்
2. படையல் - காத்தல்
3. பலி போடுதல் - அழித்தல்
4. தீபம் - மறைத்தல்
5. வேள்வி - அருளல்
ஆராதனைகளில் பஞ்ஞேந்திரியம்
( தன்மாத்திரைகள்) பற்றிப் பார்ப்போம்
=================================
1. காண்பது - ஜோதி சொரூபம்
2. கேட்டல் - காதால் நாதம், மணி ஓசை, சங்கு ஊதுதல், வேதம் ஓதல், திருமுறை ஓதல்
3. முகர்தல் - நறுமணம் கமழும் தூபம்
4. ஸ்பரிசம் - சாத்திய பூமாலை
5. சுவை - நாவில் சுவைக்க பிரசாதம் வழங்குதல்
திருவிழாவில் 5 தொழில் பற்றிப் பார்ப்போம்
=======================================
1. கொடியேற்றம் - படைத்தல்
2. திருக்கல்யாணம் - காத்தல்
3. சகோபுர தரிசனம் - அழித்தல்
4. ஸம்ஹாரம் - மறைத்தல்
5. தீர்த்தவாரி - அருளல்
கோவில் விழாவில் 5 தொழில் பற்றிப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
1.அங்குரார்ப்பணம்,பேரிமுழக்கல்,கொடியேற்றல்,காப்பணிதல் - சிருஷ்டி செய்தல( உயிர்களை படைத்தல்)
2. வேள்வி, பலி ( உணவளிப்பு ) ,வாகனம் ஏற்றுதல் - திதி ( பலி) காத்தல்
3. கந்தப்பொடி தூவல், தேர்,மஞ்சள் நீராட்டு ( கிருஷ்ணகந்தம்) - சங்காரம் செய்தல் அழித்தல்
4. கருஞ்சாந்தணிவித்து திரையில் மறைத்து உலா வருதல் - மறைப்பு ( திரோதானம்)
5. திருமணம் அனுக்கிரகம் ( அருளல்) தீர்த்தவாரி - ரதாரோகணம் ( அருட்சக்தி )
சண்டிகேசுவரர் 5 பற்றிப் பார்ப்போம்
--------------------------------------------------------
1. சிவன் கோவில் - தீவனிசண்டிகேஸ்வரர்
2. முருகன் கோவில் - சுமித்ர சண்டிகேஸ்வரர்
3. விநாயகர் கோவில் - கும்பசண்டிகேஸ்வரர்
4. சூரியன் கோவில் - தேஜஸ்சண்டிகேஸ்வரர்
5. அம்பாள் கோவில் - யமுனிசண்டிகேஸ்வரி
அபிஷேகம் பற்றிப் பார்ப்போம்
-------------------------------------------------
வேருக்கு நீர் விட்டால் அது விருட்சம் ( மரம் ) முழுவதும் பரவுவது போல் இறைவனுக்கு 1 பொருள் அபிஷேகம் செய்தால் அது உலக உயிர்கள் முழுவதும் பலன் போய் சேர்ந்து நன்மை தரும் அதுபோல நாம் வாங்கி தரும் பழம்,தேங்காய்,அன்னம்,தீர்த்தம்,பால்,தயிர்,தீபம்,பூஷணம்,தூபம்,சாமரம்,மணி,கானம் ( 5 பூத ஆக்கம்) பின் உடம்பை ஓம்புவது போல ஆடை ஆபரணம் சாத்தி அலங்காரம் நல் உணவு நைவேத்யம் ஈசன் பரிசம் ஆகி பிரசாதம் ஆகி நமக்கு கொடுக்கப்படுகிறது ஆகும்
சிவ பூஜை பற்றிப் பார்ப்போம்
----------------------------------------------
1. ஸாங்கம் - ஸ்நானம் ( அபிஷேகம் ) ,பாத்யம்,அர்க்கியம்,ஆசமனியம்,வஸ்திரம்,ஆபரணம்,சந்தனம் சாத்துவது, புஷ்பம் சாத்துவது ஆகும்
2. உபாங்கம் - கற்பூர தீபம், தீபம்,குடை,சாமரம் வீசுதல், வேதகோஷம், வாத்திய கோஷம் ஆகும்
3. பிரத்யங்கம் - நைவேத்யம், தாகம் தீர்க்க சுக்கு கலந்த இளம் சூடான நீர், கற்பூர நீராஞ்சனம் ஆகும்
விளக்கு தத்துவம் பற்றிப் பார்ப்போம்
5 முகம் என்பது - அன்பு,அறிவு,உறுதி,நிதானம்,பொறுமை இந்த ஐந்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்
விளக்கு பாகம்
-------------------------
1. தாமரை போன்ற அடிபாகம் - பிரம்மா,சரஸ்வதி
2. தண்டுபாகம் - திருமால்,லட்சுமி
3. நெய்விழும் குழி பாகம் - உருத்திரன், பார்வதி
4. திரிமுனைகள் - மகேஸ்வரன்
5 விளக்கின் மேல்நுனி - சதாசிவம்
சுடர்
--------
1. நெய் - நாதம்
2. திரு - பிந்து
3. சுடர் - திருமகள்
4. தீப்பிழம்பு - கலைமகள்
5. ஜோதி - ஆதிபராசக்தி
ஆன்மா & இறைவன்
----------------------------------
1. விளக்கு - உடல்
2. நெய் - உணர்வுகள்
3. திரிகள் - ஆன்மா ( உயிர்கள்)
4 சுடர் - ஆன்ம ஒளி
5. விளக்கு ஏற்றும் சுடர் - இறைவன் அருள் ஒளி
ஆகவே நாம் அனுதினமும் திருக்கோவில் சென்று பயன் பெறுவோம்

No comments:

Post a Comment