Saturday, December 5, 2015

63 நாயன்மார் வரலாற்று சுருக்கம்:

63 நாயன்மார் வரலாற்று சுருக்கம்:
--------------------------------------------
இந்து சமய ஆன்மீகம்
1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar - கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
2. இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanar - சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
3. இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanar - நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
4. மெய்ப்பொருளார்/Maiporul Nayanar - தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்
5. விறல்மிண்டர்/Viralminda Nayanar - சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.
6. அமர்நீதியார்/Amaraneedi Nayanar - சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்
7. எறிபத்தர்/Eripatha Nayanar - சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
8. ஏனாதிநாதர்/Enadinatha Nayanar - கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
9. கண்ணப்பர்/Kannappa Nayanar - பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.
10. குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanar - சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
11. மானக்கஞ்சறார்/Manakanchara Nayanar - தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
12. அரிவாட்டாயர்/Arivattaya Nayanar - சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
13. ஆனாயர்/Anaya Nayanar - புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.
14. மூர்த்தி/Murthi Nayanar - சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.
15. முருகர்/MurugaNayanar - வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.
16. உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanar - கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.
17. திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanar - தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.
18. திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanar - சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.
19. சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanar - சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
20. திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar - தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
21. குலச்சிறையார்/Kulacchirai Nayanar - பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
22. பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar - சுந்தரருடன் கயிலை சென்றவர்.
23. பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar - இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
24. அப்பூதி அடிகள்/Appuddi Nayanar - திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.
25. திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar - திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.
26. நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal - தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்.
27.திருஞானசம்பந்தர்/Tirugnana Sambandar - ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.
28. ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar - இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.
29.திருமூலர்/Tiru Mula Nayanar - திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.
30. தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar - கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர்.
31. மூர்க்கர்/Murkha Nayanar - சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்.
32. சோமாசிமாறர்/Somasira Nayanar - நிறைய யாகம் நடாத்தி சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.
33. சாக்கியர்/Sakkiya Nayanar - அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.
34. சிறப்புலி/Sirappuli Nayanar - சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanarபைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
36. சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar - சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
37. கணநாதர்/Gananatha Nayanar - சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.
38.கூற்றுவர்/Kootruva Nayanar - நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
39. புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar - எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.
40. நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar - சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.
41. அதிபத்தர்/Adipattha Nayanar - வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
42. கலிக்கம்பர்/Kalikamba Nayanar - முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.
43. கலியர்/Kalia Nayanar - வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.
44. சத்தி/Satti Nayanar - சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
45. ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar - மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
46. கணம்புல்லர்/Kanampulla Nayanar - விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்
47. காரி/Kari Nayanar - காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
48. நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanar - திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
49. வாயிலார்/Vayilar Nayanar - இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.
50. முனையடுவார்/Munaiyaduvar Nayanar - அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் அனைவருக்கும் உணவு அளித்தார்.
51. கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar - சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
52. இடங்கழி/Idangazhi Nayanar - அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
53. செருத்துணை/Seruthunai Nayanar- சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
54. புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar - வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.
55. கோட்புலி/Kotpuli Nayanar - சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.
56. பூசலார்/Pusalar Nayanar - பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
57. மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar - சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.
58. நேசர்/Nesa Nayanar - எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.
59. கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar - முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.
60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar - ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்
61. சடையனார் நாயனார்/Sadaya Nayanar - சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
62. இசைஞானியார்/Isaijnaniyar - சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
63. சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar - தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார்.

No comments:

Post a Comment