Sunday, November 27, 2016

வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?

நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள்.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் நடப்பதை நம் கண் முன்பு தெரிந்துக் கொள்ளும் இந்த முறையை அஞ்சனம் அல்லது ஜோதி விருட்ச அஞ்சனம் என்று கூறப்படுகிறது.
வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?
ஜோதி ஒளியின் மரத்தின் வேர், பால் போன்ற பிசின், கஸ்தூரி, கோரோசானை, குங்கும்ப் பூ, புனுகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகிய அனைத்து வகைகளில், குன்றி அளவு ஒரு கல்வத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் ஜோதி ஒளி மரப்பட்டை குழி தலைம் சேர்த்து எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் நன்கு மை போல அரைத்து கொம்பு ஒன்றில் எடுத்து வைத்து, அதை பதனம் செய்ய வேண்டும்.
பின் ஜோதி ஒளி மரத்தின் வேரை, ஒரு புதிய மண்சட்டிப் பாத்திரத்தில் போட்டு கருக்க வேண்டும். பின் அந்த மரத்தின் பட்டையை நன்கு உலர்த்தி, மண்பானையில் போட்டு மூடி அதை சீலை மண் செய்து, குழித்தைலம் இறக்கி வைக்க வேண்டும்.
மண்பானையில் உள்ளதை சிறிது நாட்களுக்கு பின் எடுத்து பார்க்கும் போது, அது கருமையான மை போல இருக்கும். அந்த மையை வைத்து அஞ்சனா தேவியின்
”ஓம் ஸ்ரீம் ஷ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம் ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹுபட் ஸ்வாஹா”
என்ற மந்திரத்தை 1008 முறைகள் உச்சாடனம் செய்து, வெற்றிலையில் மை தடவி பார்த்தால் தொலைவில் நடப்பதை நாம் தெரிந்துக் கொள்ள முடியும் என்று சித்தர் வழி வந்த காலாங்கி நாதர் கூறியுள்ளார்

Monday, November 21, 2016

சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்

பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள்.
ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.
ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்
  • மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
  • ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்.
  • ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
  • ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
  • இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
  • ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவரால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.
  • ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 12, 2016

செவ்வாய் தோசம் என்றால் " ..................

செவ்வாய் தோசம் என்றால் "
( நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் )
இந்த செவ்வாய் தோஷம் என்பது வெறும் தோஷமே ஆகும்.இதற்காக பயப்பட தேவையில்லை.இது ஆயுளை கெடுப்பது கிடையாது.
சில சோதிடர்கள் செவ்வாய் களத்திரத்தின் ஆயுளை கெடுக்கும் என பயமுறுத்தியதன் விளைவாக பல பெண்களுக்கும்/ஆண்களுக்கும் திருமணம் என்பது நடைபெறுவது கால தாமதமாகி பலர் முதிர்கன்னிகளாகவே இருக்கிறார்கள்.
செவ்வாய் தோஷம் என்பது ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ அல்லது சுக்கிரனுக்கோ 2,4,7,8,மற்றும் 12 ம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷமே ஆகும்.
இதில் என்னைப்பொறுத்தவரை இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் இந்த ஸ்தானங்களில் செவ்வாய் அமர்வது நல்லதல்ல ஏனெனில் இவை யாவும் திருமணவாழ்வு சிறக்க உகந்த இடமாதலால் இதுபோன்ற இடங்களில் பாவியாய செவ்வாய் பகவான் அமர்தல் கடுமையான செவ்வாய் தோஷத்தை உண்டுபண்ணும் என்பது என் அனுபவ உண்மையாகும்.
இதுபோன்ற செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரைதான் ஜோடியாக இணைக்கவேண்டும் .இதற்கான காரணத்தை அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
செவ்வாய் தோஷத்தை பொறுத்தவரை மூன்று வகையாக அவை தரும் பாதிப்பின் அடிப்படையில் பிரிக்கலாம்.அவையாவன:-
1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்.
2)தாம்பத்ய உறவை பாதிக்கும் செவ்வாய் தோஷம்
3)உயிரைக்கெடுக்கும் செவ்வாய் தோஷம்
என பிரித்து பார்க்கலாம்.
1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்:
-
செவ்வாய் என்பது நமது உடலில் உள்ள இரத்தத்தை குறிப்பதாகும்.நமது இரத்தத்தில் ஆண்டிஜென் ,ஆண்டிபாடி எனும் இரு பகுதிகளின் கலவையாகும்.இங்கு ஆண்டிஜென் நுண்கிருமி ஆகும்.இது உடலுக்கு நல்லதல்ல. உலகிலே ஆண்டிஜென் இல்லாத ஒரே பொருள் தாயின் பால் ஆகும்.எனவே தாய் பாலை அருந்திய குழந்தைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்களாக உள்ளார்கள்.மற்றொன்று ஆண்டிபாடி ஆகும்.ஆண்டிபாடி என்றாலே "எதிர்ப்பு சக்தி" என்று பொருள்.இது இரத்தத்தில் மிகுதியாக இருப்பது நல்லது.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
இதை ஏன் இவ்வளவு தூரம் ஒரு அறிவியல் ஆசிரியாக விளக்கினேன் ஏன் எனில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களது இரத்தத்தில் இந்த ஆண்டிஜென் எனும் நுண்கிருமி அதிகமாக இருக்கும்.இந்த கிருமிகளை எதிர்க்கும் சக்தியான ஆண்டிபாடியும் அவர்களது இரத்தத்தில் அதிகப்படியாக இருப்பதால் அது அவர்களை பாதிக்காது.ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை மணக்கும்போது இந்த நுண்கிருமிகள் செவ்வாய் தோஷமில்லாதவர் உடலில் நுழைந்து நாளுக்குநாள் உடல் மெலிந்து நோயாளியாவர்.
ஆண் ஜாதகத்தில் இரண்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் செவ்வாய்பகவான் இருந்து அவருடன் ராகு அல்லது கேது பகவான் இணைந்திருந்தால் (இது மனைவி ஸ்தானத்திற்கு ஆறாமிடம் மற்றும் எட்டாமிடம் ஆக வரும்) இதனால் அவனுக்கு வரும் மனைவிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமிருந்தால் அவளுக்கு திருமணத்திற்கு பிறகு மாதாவிலக்கு கோளாறுகள்,கர்ப்பபையில் கட்டிகள்,அதிகமான உதிரப்போக்கு,அடிக்கடி கருச்சிதைவு மற்றும் இரத்தசோகை போன்ற நோய் உண்டாகலாம்.இதனால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.இது செவ்வாய் திசையினிலோ அல்லது செவ்வாயுடன் சேர்ந்த ராகு,கேது திசைகளில் மேற்படியான பலன்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
இதேபோல பெண் ஜாதகத்தில் இரண்டாமிடத்திலோ அல்லது பணிரெண்டாமிடத்திலோ செவ்வாய் இருந்து அவருடன் ராகு மற்றும் கேதுபகவான் இணைந்திருந்தால் அவளுக்கு வரும் கணவனுக்கு செவ்வாய் தோஷம் இல்லையென்றால் இரத்தத்தில் கிருமிகளின் தாக்குதல்,விரை வீக்கம் ஏற்படுதல் மற்றும் அறுவை சிகிச்சை பாதிப்புகள் செவ்வாய் திசையிலோ அல்லது ராகு/கேது திசைகளில் தரலாம்.
2)தாம்பத்ய சுக்த்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்;-
பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமா இருக்கும்.காம உணர்வு மிகுதியாக இருக்கும்.இரத்தத்தின் தன்மை அதிக வீரியத்துடன் இருக்கும்.உயிர் திரவம்(விந்து/அண்ட அணுக்கள்) கெட்டித்து இருக்கும்.தாம்பத்ய உறுப்புகள் வலிமை மிக்கதாக இருக்கும்.தாம்பத்ய உறவில் தீவிரமான ஈடுபாட்டில் இருப்பார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை அதிகமாக விரும்புவுவார்கள்..இவர்கள் இரத்தத்தில் ஆண்டிஜென் மிகுந்திருக்கும்.
செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.காம உணர்வு சராசரியாக இருக்கும்.இவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவார்கள்.தங்களின் எதிர்பாலினத்தாரை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.தாம்பத்ய உறவுக்கு அதிகம் முக்கியத்துவம் தரமாட்டார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை விரும்பி பேசமாட்டார்கள்.இவர்களது இரத்தத்தில் ஆண்டிஜென் அதிகம் இருக்காது.
எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள மற்ற நபரை இணைக்கவேண்டும்.இவ்வாறு செவ்வாய் தோஷம் உள்ளவரை இத்தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது அவர்களது காம உணர்வுக்கு இத்தோஷமில்லாதவர்கள் ஈடுகொடுக்க இயலாததால் அவர்கள் வேலி தாண்டிய வெள்ளாடு ஆக மாறும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.
ஆண்/பெண் ஜாதகத்தில் செவ்வாய் நான்கு,ஏழு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் இருந்து அவருடன் பாதிக்கப்பட்ட சுக்கிரன் (நீசம்,அஸ்தங்க மற்றும் வக்கிர) இணைந்து சுபர் பார்வை பெறாவிடில்
இவர்களை செவ்வாய் தோஷமில்லாதவரோடு இணைக்கும்போது அவனோ /அவளோ காம மிகுதியால் அதாவது உடல் உறவில் திருப்தியில்லாமல் பல மலரில் தேன் எடுக்கும் வண்டாவாள் அல்லது தனியாக பிரிந்து வாழும் சூழ்நிலையை உருவாக்கும்.இது செவ்வாய் அல்லது சுக்கிரதிசையில் நடக்கலாம்.
3)உயிரை கெடுக்கும் செவ்வாய் தோஷம்:-
கால புருஷ லக்கனத்திற்கு பாதகாதிபதியான சனி பகவான் தனக்கு சத்ருவான செவ்வாய் பகவனோடு இரண்டு,நான்கு,ஏழு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் அமர்ந்து அவனுக்கோ/அவளுக்கோ வரும் ஜோடிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து விவாகம் செய்தால் செவ்வாய் திசை சனிபுத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ தன் துணையை இழக்கும் வாய்ப்பு உருவாகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு லக்கனத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் அதிபதி வலுக்குறைந்த நிலையில் செவ்வாய் தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது இந்த செவ்வாய்தோஷமே தாரதோஷமாக மாறி தோஷம் இல்லாதவரின் உயிரை பறித்து விடும்.அதேநேரத்தில்( 2,7 ஆம் அதிபதி ) வலுவான நிலையில் தோஷமில்லாதவருக்கு திருமணம் செய்யும்போது உடல் நலக்குறைவும்,தாம்பத்ய குறைபாடும் உருவாகலாம்.

Thursday, November 10, 2016

காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால்.......

நாம் பொதுவாக எப்பொழுதும் காலைத் தொங்க வைத்துத்தான் அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்பொழுது, பேருந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபா, கட்டில், சேர் இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரம் காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். இதனால் நமக்குப் பல நோய்கள் உருவாகின்றன. காரணம் என்னவென்றால், காலைத் தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாகச் செல்கிறது. மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கிச் சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஓட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஓட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில்தான் இருக்கின்றன. எனவே, ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாகிறது. கால்களுக்கு, நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
எனவே, தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதைத் தவிருங்கள்! குறிப்பாக, சாப்பிடும்பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. இதனால், ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் (சம்மணமாக) அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிடச் சாப்பிடச் சாப்பாடு ஜீரணமாகி விடும்.
ஆனால், இப்பொழுது பலர் காலை மடக்கி உட்காரவே முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், நாம் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்; அது மலம் கழிக்கும்பொழுது. யாருடைய வீட்டில் இந்திய பாணிக் கழிப்பறை (Indian style toilet) என்று அழைக்கப்படும் காலை மடக்கி அமரும்படியான கழிப்பறை இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை. ஆனால், மேலைப் பாணிக் கழிப்பறை (European style toilet) உள்ள வீடுகளில் உள்ள அனைவருக்கும் மூட்டு, முழங்கால் வலியும் அவை சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றன. ஏனென்றால், இவர்கள் ஒரு முறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது.
முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை இருந்தது. ஆனால், இப்பொழுது சிறு குழந்தைகள் கூட மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துவதால் அவர்களும் தரையில் அமர முடியாமல் தவிக்கிறார்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுத் தரையில் உட்காரக் கூட முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்குக் கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
எனவே, ஏற்கெனவே மூட்டு, முழங்கால் வலி முதலான ஏதேனும் காரணங்களுக்காக மருத்துவர் பரிந்துரைப்படி மேலைப் பாணிக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்கள் தவிர, மற்றவர்கள் தயவு செய்து அதைப் பயன்படுத்த வேண்டாம்! அதற்குப் பதிலாக இந்திய பாணிக் கழிப்பறை பயன்படுத்துங்கள். இதனால், குறைந்தபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதைப் போல் அமர்ந்து எழ வேண்டியிருக்கும்.
முடிந்த வரை காலைத் தொங்க வைத்து அமர்வதைத் தவிருங்கள்! கட்டிலிலோ, சோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்! சாப்பிடும்பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால், அந்த நாற்காலியில் காலைத் தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிடுங்கள்!
இன்று முதல் காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால், ஜீரணமும் நன்றாக நடக்கும். உடம்பில் சக்தியும் அதிகரிக்கும். மூட்டு வலியும் கால் வலியும் வராது!

Saturday, October 22, 2016

கோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்

கோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்
இருக்கிறது ?

01. கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை
சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக
மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது.
இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்?

02. கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி
சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும்
இல்லீங்களா?

03. பிறகு எப்பிடி முழு மனமும்
தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும்
தெய்வீகம்னு சொல்ல வராங்களா?

04. அப்பிடி இருந்தாலும், ரெண்டு
பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற
சிற்பங்கள், அது எதை விளக்க வருது?

05. ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க
என்ன நினைக்கிறீங்க?


==============================
=================

பொதுவாக எல்லோரும் கூறும் விடயம்
எல்லாம் வல்ல இறைவனை காண வேண்டும்
என்றால் "காம என்னம் தடையாகயிருக்கும்.
அத்தகைய காமத்தை, காம என்னத்தை,
குரோதம் (பலி பீடம்) கடந்து வந்தாலே
இறைவனை அடையலாம்" என்பார்கள்.
இதனை சற்று விவாதிப்போம் வாருங்கள்
கோபுரத்தை ஊருக்கு வெளியிலிருந்தே
பார்க்கும்போது கண்ணில் படுவது,
வானளாவிய கோபுரம் அது ரொம்ப
அழகாயிருக்க்கிறது என்று தோன்றும். அதை
பார்க்க அருகில் போவோம். கோபுரத்தை
அண்ணாந்து பார்க்கிறோம். அதில்
அடுக்கடுக்காக பல பொம்மைகள். கீழ்
வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச
சிலைகள் காணப்படுகிறது.
ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும்,
முனிவர்களும், உழவர்களும், குறவர்களும்,
அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக
தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும்,
அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன
அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை
வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும்
பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில்
உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது
இந்து மதத்தின் வழக்கம் அல்ல. வாழ்க்கையின்
எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு
ஒரு முழுமையை உருவகிக்கவே அது
முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும்
அதே முக்கியத்துவம் காமத்துக்கும்
இருக்கின்றது.
இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல்
பாடம். "நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால்
உயர்வாய்" என்பதை போதிக்கிறது.
நம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை
இல்லை என வைத்துக் கொள்வோம். நம்
மனதிலே தோன்றுவது என்ன?
ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று
பார்த்தால் இன்னும் பல ஆபாசமான
காட்சிகளையும் காண முடியுமோ?
என்னும் எண்ணம். உள்ளே செல்கிறோம்.
அங்கு காண்பது என்ன?
நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபம் என
பெரிய பெரிய மண்டபங்கள். இவற்றில் மக்கள்
கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக
சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை,
நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு,
பார்த்து ரசிக்கவோ வசதிகள். சொல்லப்
போனால் இலவச பாடசாலைகள் தான்
கோயில்கள்.
வெளிப் பிராகாரம், நடுப் பிராகாரம், உள்
பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றி
வருகிறோம். நல்ல வெளிச்சமாக இருந்த
வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச்
செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து
கடைசியில் இறைவன் சிலைகள் உள்ள
கருவறையில் வழிபட்டு. அங்கு எண்ணெய்
விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம்
மங்கலாகத் தெரிகிறது. பூஜை செய்பவர் ஒரு
தட்டில் கற்பூரத்தை ஏற்றி இறைவனின்
சிலைக்கு முன்னே சுற்றிக் காட்டுகிறார்.
இப்போது இறைவனின் முகம் நன்றாகத்
தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக்
கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம். நம்
மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின்
உருவம்.

"உன்னுள்ளே உற்றுப் பார். என்னைக் காண்பாய்"
என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு
வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம்.
இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா
விஷயங்களுமே புனிதமானவை தான்.
எதையும் தவறாகச் செய்யும் போது அதன்
புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது.
உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால்
அது அர்த்தமுள்ள பேச்சு. அப்பேச்சுடன் தீய
வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால்
அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது.
ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர
விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள்
தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை.
ஆபாச சிலை தோற்றமானது சூரியனை
வழிபடும் "சௌர மதத்தில்" காமத்தைக்
காட்டும் சிலைகள் பெருமளவு இருந்தன.
பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்த போது
அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும்
இடம்பெற்றன. அதில் இருந்து பின்
படிப்படியாக மற்றைய கோயில்களுக்கும்
பரவியது என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.
காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக
எண்ணுபவை இந்துமதம். அந்த ஆற்றலை
அறிவதும் அறிவதன் மூலம் கடந்து
செல்வதுமே மானுட உண்மையின்
உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை
நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின்
வழியாகக் கண்டன. அந்த இந்துமத மரபும்
பாலியல் சிற்பங்களை உருவாக்கியது.
இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு
கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு
உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறி தொகுப்பு
அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு
மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து
உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை.
அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த
அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை
உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின்
கடமை.
புனிதமான தாம்பத்ய உறவு
இல்லையென்றால்
குழந்தைகள் எப்படிப் பிறக்கும்?
உலக இயக்கம் எப்படி நடக்கும்?
உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி,
கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே
இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம்.
இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு
என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக்
கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை
வாய்ந்தது.
சினிமா, நாடகம், டிவி போன்றவை வந்து,
இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்க
ு முன்பு,
கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு
புனிதமாக வாழும் நெறியை மனித இனம்
உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட
சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு
ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
இந்து கோவில்களில் ஆபாசம் எதற்கு?
இதற்கான காரணம் மனிதனின் எண்ணத்தில்
இருந்து ஆரம்பம் ஆகிறது.
காமம் இயற்கையின் இனவிருத்திற்கு
முக்கியமான ஒன்று.
அக்காமம் ஒவ்வொரு உயிரினத்திர்கும்
ஒவ்வொரு விதமான தன்மையில் மாறுபடும்.
மனிதனின் வாழ்நாளில் சிறுபகுதியே காமம்
அக்காமம் புனிதமானது.
அதுவே நாளின் அனைத்து பொழுதிலும்
மனித தன்மைக்கு அப்பாற்பட்டு மிருகத்தின்
நிலையில் ஆகும் பொழுது அக்காமம் வக்கிர
காமம் ஆகிறது.
இதையே வக்கிர புத்தி என்றார்கள்.
மனிதனின் எண்ணத்திற்குக்கும் கண்களினால்
எழும் ஒளிக்கதிர்கும் சம்பந்தங்கள் உள்ளது.
கண்களினால் எழும் ஒளிக்கதிர் எண்ணும்
எண்ணத்திற்கு ஏற்றார்போல்
நன்மையாகவும்,தீமையாகவும்
விளைகின்றது.
இதையே முன்னோர்கள் நல்லதையே நினை
நல்லது நடக்கும் என்றார்கள்.

"ஊன் பற்றி நின்ற உணர்புற மந்திரம்
தான் பற்றி நிற்கும் தலைபடும் தாமே"
என்ற திருமந்திர திருபதிகம் மூலமும்
உடலால் பற்றிய பற்றுகளால் நன்மை,தீமை
தானே விளையும் என அறியலாம்.
இனி கோவிலின் அமைப்பை பார்ப்போம்.
கோவிலின் முகப்பு கோபுரம் ஏன் இவ்வளவு
உயரமாக அமைத்தார்கள்.
நவதானியங்கள் எனப்படும் மனிதனுக்கு
அத்தியாவசியமான
நெல்,கோதுமை,பாசிப்பயறு,
துவரை,மொச்சை,எள்,கொள்ளு,
உளுந்து,கடலை முதலானவைகளை இயற்கை
சீற்றத்திலுருந்து காக்கவே உயரமான
கோபுரத்தை அமைத்து அதில் கலசம் எனும்
சிறப்பு பாத்திரத்திலே வைத்தனர்.
கலசத்தின் வடிவம் மேற்கூறை
கூர்மையானதாக காற்று புகாத வண்ணம்
அமைத்தனர்.
இக் கலசம் கோவிலின் இடிமின்னல்களை
தாங்கும் சக்தியும் கொண்டது.
கலசத்தின் உள்இருக்கும் தானியங்கள் 12
வருடம் விதையின் தன்மை மாறாமல்
உயிருடன் இருக்கும்.
இயற்கை சீற்றத்தினால் விதைகள்
அழிவுற்றால் இக்கலசத்தில் இருந்து எடுத்து
விவசாயம் செய்யலாம் என்பதே
முன்னோர்களின் நோக்கம்.
இத்தானிய கலசத்தை வக்கிரபுத்தி
கொண்ட ஒருவன் கண்டால் அவன் கெட்ட
எண்ணத்தாலே அத்தானியங்களின் ஆயுள்
குறையும். இவர்களால் யாதொரு நன்மையும்
இல்லை தீமையே அதிகம்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல
வக்கிரத்தை வக்கிரத்தால் அழித்தனர்.
கண்ணில் தென்படும் விதத்தில் வக்கிர
சிலைகளை வடிவமைத்தனர்.
வக்கிரவாதி கண்கள் தனக்கு தேவையான
வெறும் சிலைகளை ரசித்தது.
தானியகலசம் இவன் எண்னத்திற்கும்
எட்டாமல் போயிற்று.
கோவிலின் உள்ளே ஏன் வக்கிர சிலைகள்
அமைத்தார்கள்?
வெளி பிரகாரத்திலே கெட்ட எண்ணம்
கொண்டவர் நிற்க.
கருவறையில் நல்ல எண்ணம் கொண்டவர்
நிற்க என பிரிப்பார் இல்லாமலேயே
வகைபடுத்தி புறம்தள்ளினார்கள்.
நல்ல எண்ணம் கொண்டவர்கள் வக்கிரத்தை
தாண்டி மூலத்தை அடைகிறார்கள்.

"வக்கிரம் என்றுமே வெளியில் இருக்கும்
அடிமையாக"
எண்ணத்தின் அதிர்வலைகளின் குவியலே
பிரார்தனை
அப்பிரார்தனையில் தீய எண்ணங்களின்
அதிர்வுகள் கலக்காமல் இருக்கவும் இது
போன்ற சூட்சம வழிமுறைகளை வகுத்தனர்
முன்னோர்கள்.
முன்னோர்கள் செயல் காரணம் இல்லாமல்
இல்லை. செயல் அறியாத சிலரே குறை
கூறுகின்றார்கள்
இக்கேள்விக்கு ஆயிரம் காரணங்கள் அறிஞர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.

'வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே'


'வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே' உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாமனிதன்.... படியுங்கள் பகிருங்கள்!

 

 

 

 

முன்னொரு காலத்தில்பிழைக்கத் தெரியாத முட்டாள்என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

 

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.

 

அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான்சாய்க்கிரோ ஹோண்டா”.

 

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்றுவெற்றி என்பது 99 சதவீத தோல்வியேஎன்று அந்த இளைஞன் சொன்னார்.

 

Toyoto நிறுவனத்திற்கு piston(உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

 

 

 

 

 

யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

 

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

 

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

 

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

 

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

 

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

 

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு.

 

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்நார் உயிர்நண்பன்.

 

 

 

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.

 

ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

 

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

 

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

 

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

 

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

 

மொத்தத்தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.

 

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........

 

 

 

ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......

 

நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

 

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

 

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.

 

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.

 

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

 

 

 

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

 

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?????

 

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

 

கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

 

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

 

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

 

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

 

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

 

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.

 

இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

 

ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

 

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியேஎன்று.....