Sunday, January 10, 2016

ஒன்பது சுற்றுக்களைக் கொண்ட அம்பிகையின் ஸ்ரீசக்கரம்

அம்பிகையின் ஸ்ரீசக்கரம் ஒன்பது சுற்றுக்களைக் கொண்டதாகும், நவாவர்ணம் என்பர். ஆவரணம் என்பது சுற்று,அடைப்பு எனப் பொருள் படுவதாகும்.ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில், கூறுகிறபடி நாற்பத்தி நான்கு தத்துவங்களாக விளங்குகிற சியாமள சக்கரம் அமைப்பு.1. பிரகாரங்கள்-3 (சதுரங்கள்)2. மேகலைகள்-3 (வட்டங்கள்)3. தளங்கள்-16 (தாமரை இதழ்கள்)4. சிவ ரூப சக்கரங்கள்-45. சக்தி ரூப சக்கரங்கள்-56. மூலகாரண தாதுக்கள்-97. பிந்துஸ்தான மந்திரகோணங்கள்8. எட்டுத் தளங்கள்(தாமரை இதழ்கள்)என்று மஹாசக்திப் பிரவாகமாக விளங்கும் ஸ்ரீசக்கரம் சூக்ஷமமான வடிவிலுள்ளதாகும். இதைப் பெரியோர்கள் மூலம் அறியத்தக்கதாகும்.ஒன்றின் கீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய், நேர்கோணங்கள் 4.தலைகீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய் முக்கோணங்கள் 5.முக்கோணங்கள் 14வெளிமுக்கோணங்கள் 10உள்முக்கோணங்கள் 10நடுமுக்கோணம் 1 (சிறியது)ஒரு புள்ளி 1 (சிறுமுக்கோண நடுவில்)சிவகோணம் முன் பகர்வது ஒரு நாலு சக்தி நெறிசெறிகோணம் அத்தொடு ஒரு மருவு கோன்நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒருநவில் கோணம் உற்றதுவும் வலயமாய்இவரா நிரைத்;த தளம் இருநாலும் எட்டுஇணையும்எழிலாய வட்ட மொடு சதுரமாய்உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என்உமை பாதம் உற்ற சிறு வரைகளே.லோக நாயகி யோக நாயகியாய், யோக நெறியின் விளக்கமாக உள்ளதே ஸ்ரீ சக்கரம் என்பா.; யோக தத்துவங்களின் விளக்கங்களாக அந்தக்கரணம், மன விருத்திகள், என எண்ணப்பரவல்களின் நிலைப்பாடு, குறித்து மேம்படுத்தும் நிலையாகும்.3 சதுரப் பிரகாரங்களில் ஒன்றான சித்த விருத்தி (மனமாறுதலை அடக்கி விகாரம் இல்லாமல் செய்தல்) யோகமாகும்.மூன்று குணங்களாகிய சத்வ குண, தமோ குண, ரஜோ குண நிலைகளை மாற்றி சத்வகுண மேம்பாட்டை ஏகாக்ரஹ சிந்தையை வைராக்ய நிலையில் வைத்திருக்கும் போது கிடைக்கும் அட்டமா சித்திகளைப் பெறச் செய்யும்அணிமா, மகிமா லஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசித்வம் வசித்வம் ஆகியவற்றை அளிக்கும் 8 தேவதைகளும், காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாச்சர்யம், புண்ணியம், பாவம் என்ற 8 தேவதைகளும் அடுத்து ஆதாரங்களானமூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி;, ஆக்ஞை,சகஸ்ராரம், பரவெளி என 8 ஆதார சக்தி தேவதைகளும் 3 மேகலையாக விழிப்பு, உறக்கம், கனவு, வீடு, மோட்ஷம் என்பது சுத்த சைதன்ய ரூபமான புருஷனுக்கு அந்தக்;கரணம் முதலிய உபாதிகள் விலக்கி அவனது உண்மையான ஸ்வரூபத்தில் நிலை பெறச்செய்த நிலையில் தன்னையும் தன்னுள் அடங்கிய மஹாசக்தியை வெளிபடுத்தி உலகை உய்யச் செய்யும் ஸ்ரீ ஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவே இந்த ஸ்ரீ சக்கரமாகும்.

No comments:

Post a Comment