Thursday, June 16, 2016

தாம்பத்திய உறவில் ஈடுபட உகந்த நேரம் எது?

தாம்பத்திய உறவில் ஈடுபட உகந்த நேரம் எது?
--------------------------------------------------------------------------
இரவு நேரத்தில் மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபடவேண்டும், பகல் நேரத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஜோதிட ரீதியாக காரணம் உண்டு. தாம்பத்திய உறவைக்குறிக்கும் பாவம் ஏழாம் பாவமாகும். காலப்புருச லக்கினமான மேசத்திற்கு துலாம் ராசி ஏழாம் பாவமாக அமைகிறது. லக்கினத்தை உதயம் என்றும், ஏழாம் பாவத்தை அஸ்தமனம் என்றும் ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பகல் காரகனான சூரியன் காலப்புருச லக்கினத்திற்கு ஏழாம் வீடான துலாத்தில் நீச்சமடைகிறான். இரவுக்காரகனான சனி துலாத்தில் உச்சமடைகிறான். களத்திரக்காரகனான சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடு. உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது என்பதை நீச்ச சூரியன் சுட்டிக்காட்டுகிறான். கண்களுக்கு காரகனான சூரியன் இங்கே நீச்சமடைவதால் உடலுறவின் போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவச்செயல் என்பதை ஏழாம் பாவம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் பகல் நேரம் வெப்பம் அதிகமாக இருக்கும் , இரவு நேரம் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். உடலுறவுக்கு குளிச்சியான நேரமே உகந்தது. பகல் நேரத்தில் உடலுறவு கொள்ளும்போது அதிக வெப்பத்தால் ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல் , விந்து முந்துதல் (துரித ஸ்கலிதம்) போன்ற பிரச்சினைகள் வரும். தாம்பத்திய சுகத்தை சரியாக அனுபவிக்க முடியாது. தாம்பத்திய உறவில் முக்கிய பங்கு சனிக்கு உண்டு. காமப்பசியை கிராமப்புறங்களில் மூட்டு பசி என குறிப்பிடுவார்கள். அதாவது கால் மூட்டு பசி என குறிப்பிடுவார்கள். தாம்பத்திய உறவில் கால் மூட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூட்டுக்களின் பலத்துடன்தான் உடலுறவில் நன்றாக இயங்க முடியும். கால் மூட்டுக்களை குறிக்கும் பாவம் பத்தாம் பாவமாகும். காலப்புருச லக்கினத்திற்கு பத்துக்குடையவனான சனி கால் மூட்டுக்களை குறிக்கும் கிரமாகும். சனி துலாத்தில் உச்சமடைவதன் மூலம் தாம்பத்திய உறவில் தனக்கு இருக்கும் வலிமையைக்காட்டுகிறான். எதிர்பாலரை நிர்வாணப்படுத்தி வெளிச்சத்தில் பார்ப்பது பாவச்செயல் என்பதால் பகல் நேரத்தில் உடல் உறவில் ஈடுபடக்கூடாது. மேலும் பகல் நேர உடல் உறவு ஆண்களுக்கு விரைவில் ஆண்மைத்தன்மையை இழக்கச்செய்யும். மீனத்தில் களத்திரக்காரகன் சுக்கிரன் உச்சமடைகிறான். மீனம் காலப்புருச லக்கினத்திற்கு பன்னிரண்டாம் வீடாகும். காலை 4 மணி முதல் 6 மணி வரை பன்னிரண்டாம் பாவம் இயங்கும். அந்த நேரத்தில் சுக்கிரன் உச்சமாக இருப்பான். இதனால் இந்த நேரத்தில் காம உணர்ச்சி அதிகமாக தூண்டப்படும்.

No comments:

Post a Comment