Saturday, September 24, 2016

#ஈசனை_எப்படி_வணங்கினால்_என்ன ..?
★சிவ பூஜை என்னவொன்று அறியாத மானிடர்களுக்கும் நாயன்மார்களுக்கும் விலங்கினங்களும் சிவ கதி அடைந்துள்ளார்கள் அவர்கள் எந்தவித சாஸ்திரங்களும் சாம்பிரதாயங்களும் கடைபிடித்து சிவ கதி அடைய வில்லை
★அன்பு தான் இந்த உலகத்தை ஆட்டுவிக்கும் ஒரு மாபெரும் சக்தி அதை இயக்குபவன் எம் பரம்பொருள் ஈசன் உனக்குள் இருந்து ஆட்டுவிக்கும் இறைவன் ஈசனாக இருக்கலாம் இயேசுவாக இருக்கலாம் அல்லவாக இருக்கலாம் ஆனால் அவர்கள் யாரும் அவர்களை வணங்க வரைமுறை இயற்ற வில்லை உண்மையான அன்பை...
தவிர ....!

★நவ அபிசேகம் செய்தவனுக்கும் ஒரே புண்ணியம் தான் நான்கு ரூபாய்க்கு எண்ணெய் வாங்கி செல்பவனுக்கும் ஒரே புண்ணியம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் ...!
★தன்னிடம் பிச்சை கேட்டு வந்த சிறுவனுக்கு ஒரு நெல்லிக்கனிக்கு பல தங்க நெல்லிக்கனி தந்த வரலாறு நமது தாய் திருநாட்டில் தான் நடந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அந்த அம்மையிடம் இருந்தது சாஸ்திரம் அல்ல தன்னலமற்ற அன்பும் பக்தியும்..!
#மனமது_செம்மையானல்_மந்திரம்_தேவையில்லை

No comments:

Post a Comment