Saturday, April 23, 2011

அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்

அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்

முன்னொருகாலத்தில் தஞ்சாவூரில்- திருக்கடையூர் என்ற கோவில் இருந்தது.அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்தக்கோவிலில் உதவியாளராக இருந்தார். அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமிஅம்மன் மீது அளவற்ற பக்தி.
அது எந்த அளவுக்கு எனப்பார்த்தால், இன்றைய குணா சினிமாவில் எப்படி கமல் அந்த சேட் பெண்மீது ஆழமான காதலாக இருப்பாரோ அது போல !!!
ஒரு நாள். . .
அப்பகுதியை ஆண்ட மன்னன் அந்தக்கோவிலுக்கு வந்தான்.அன்று அமாவாசை.
அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமி பட்டரிடம் இன்று என்ன தேதி(திதி)? என்று கேட்டான்.அவர் எப்போதும் அன்னை அபிராமியம்மன் நினைவாகவே இருந்ததால் அன்று அமாவாசை என்பதை மறந்து பவுர்ணமி எனக்கூறிவிட்டார்.
மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவு வந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள்.அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரை சிரச்சேதம்(தலையை வெட்டிவிடுதல்) செய்துவிடுங்கள் என உத்தரவிட்டுப்போய்விட்டார்.

மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள் அபிராமிபட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணரவைத்தனர்.அவருக்கு உயிர்பயம் வந்துவிட்டது.
அபிராமி பட்டர் அபிராமி அம்மனைச் சரணைடந்து அவளை நினைத்து கண்ணீர் பெருகப் பாடினார். இரவு வந்தது. பௌர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்து அபிராமிபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.அபிராமி பட்டர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். அபிராமி அம்மனுக்கு நன்றி கூறினார்.
இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால்,25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமிகள் வரும்.அதாவது, பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழற்சி ஒருமுறை மட்டும் உடையும்.
இதன்மூலம் நமது தமிழ் தமிழர் பண்பாட்டின் தொன்மை அதாங்க பழமையை அறியலாம்

No comments:

Post a Comment