Monday, April 25, 2011

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்

இதுதசாவதாரங்களில் 10-ஆவது அவதாரமாகும். அது எப்போது என தெரியாவிட்டாலும் நிச்சயம் நடக்கும் என புராணங்கள் சொல்கின்றன. அதில் "யாஸஸ்' எனும் பிராமணருக்கு மகனாக கல்கி பிறப்பார். இவர் சகல வல்லமையுடன் பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மார்பில் துளசி மாலை துலங்க, கையில் வாளும் கேடயமும் தரித்து வெண்புரவி மீதேறி புறப்பட்டு
வந்து, சிரஞ்சீவியான பரசுராமரிடம் சென்று பற்பல கலைகள் பயின்று உபதேசம் பெற்றபின், குதிரை மீதேறி வாயு வேகத்தில் மூன்று இரவுகள் உலகை வலம் வருவார்.அப்போது அக்கிரமச் செயல் புரிவோரை எதிர்த்து அழித்து, அதர்மவான்களையும் கொடிய வர்களையும் ஒழித்து பூமியைப் புனிதப்படுத்துவார். தர்மத்தை நிலைநாட்டுவார். மக்களை நல்வழிப் படுத்துவார். அமைதி, அன்பைப் போதிப்பார். அதன்பின்கல்கி அவதாரம் நிறைவடையும். கலியுகமும் முடிவடையும். பின் புதிய யுகமான
சத்ய யுகம் பிறக்கும். அதில் அமைதியும் அன்பும் மட்டுமே மலரும்.

No comments:

Post a Comment