Saturday, April 23, 2011

உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா?

உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா?

இன்று தமிழ் உலகத்தின் முக்கியப்பிரச்னை: என் குழந்தை என் பேச்சைக் கேட்பதில்லை.என்ன செய்வதென்று தெரியவில்லை;
உங்களின் குழந்தையின் 3 வயது முதல் 12 வயது வரை
அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்களா?

தகுந்த நபரிடம் உங்கள் குழந்தையை அறிமுகம் செய்திருக்கிறீர்களா?

சுய சிந்தனையை ஊக்குவிக்குறீர்களா?

இவற்றுக்கெல்லாம் இல்லை என்பதால்தான் 12 வயதிற்கு மேல் உங்கள் குழந்தை( ஆணும் சரி பெண்ணும் சரி) உங்கள் பேச்சைக் கேட்பது இல்லை.
தகவல் ஆதாரம்:விஜய பாரதம் தேசிய வார இதழ் 23.5.2008 பக்கம் 35.
எனக்கு எவ்வளவு வேலை இருக்குது தெரியுமா? என் பிள்ளையிடம் கூட மனம்விட்டுப் பேச நேரமில்லை; என்கிறீர்களா?
நீங்கள் சம்பாதிப்பது யாருக்காக?
உங்களது அடுத்த தலைமுறையை பொறுப்பாக வளர்க்கும் பொறுப்பு உங்களது குழந்தையின் ஆசிரியர்களுக்கு வெறும் 20% தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதே சமயம் உங்களது பங்கு 80% என்பதை மறக்காதீர்கள்.
நீங்கள் அன்பு செலுத்தவும் மனம் விட்டுப்பேசவும் நேரம் ஒதுக்காத போது அந்த இடத்தைப்பிடிப்பது யார் தெரியுமா? காமவெறிபிடித்தவர்கள்,நயவஞ்சகம் நிறைந்தவர்கள், உங்கள் குடும்பத்தை நாசமாக்கிட நினைக்கும் உங்கள் உறவினர்கள்.

No comments:

Post a Comment