Monday, April 25, 2011

மகாலட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றியிருந்தாலும்,தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று(சினிமா- டிவியில் நடித்திருத்தல் அல்லது உலகின் மிகப் பழமையான தொழில் செய்திருத்தல்) பொன் - பொருள் - ஆடைகள் சேர்த்திருந்தாலும்
அவர்கள் இப்பிறவியில் / மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம்,பொருட்கள்,பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.வறுமையால் ஏராளமான துன்பங்ளை அடைவர்.ஆதாரம்:மனு நீதி நூல்,கருட புராணம்.

இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்.
மகாலட்சுமி பூஜையின் போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.

எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?

அ.வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.(இந்த வலைப்பூவின் முகப்பில் உள்ள படம் கூட ஓ.கே!)
ஆ.காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும்.பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும்.
இ.நெய் தீபம் ஏற்றவும்.
ஈ.மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.
உ.நைவேத்தியத்தை பெண்குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும்.
ஊ.இதையே ஆடிமாதம் செய்தால் அதன் பெயர்தான்
வரலட்சுமி விரதம்.
எ.ஆடிமாதம் செய்யும் போது வயதான சுமங்கலிகளை வரவழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.

No comments:

Post a Comment