Saturday, April 23, 2011

நெற்றியில் திலகம் இடுவதன் நோக்கம் என்ன?


நெற்றியில் திலகம் இடுவதன் நோக்கம் என்ன?

இந்து சமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், முக்கியமாக மணமான பெண்மணிகள்,நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர்.மேலும் விசேஷ நாட்களிலும் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு முன்போ பின்போ அணியப்படுகிறது. பல சமூகங்களில் மணமான பெண்டிர் எந்நேரத்திலும் நெற்றியில் குங்குமப்பொட்டுடன் திகழவேண்டும் என்ற நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது.சமயக்கோட்பாடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் திலகம் இடுவதை ஒரு சடங்காகவே செய்கின்றனர்.ஆன்மீகப்பெரியோர்களையும், ஆண்டவனையும் திலகமிட்டு தொழுது வணங்குவதும் வழக்கில் உள்ளது.வட இந்தியாவில் பல பகுதிகளில் மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கும்போதும் வழியனுப்பும்போதும் திலகமிடுவது வழக்கில் உள்ளது.

ஏன் திலகம் அல்லது பொட்டு போன்ற சின்னங்களை நெற்றியில் அணிகிறோம்?
திலகம் அதனை அணிபவரிடத்திலும் அவரைச் சூழ்ந்துள்ளவரிடமும் ஒரு தெய்வீகமான, புனிதமான உணர்வை ஏற்படுத்துகிறது.இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தனம்,குங்குமம் மற்றும் பஸ்மம்(விபூதி) முதலியன பிரசாதமாக அளிக்கப்படுகின்றன.அதனை நமது நெற்றியில்,புருவங்களுக்கு இடையே உள்ள பகுதியில் அணிகிறோம்.இப்பகுதி நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் மையமாகும்.யோக சாத்திரத்தில் இது ‘ஆக்ஞா சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.திலகத்தின் நெற்றியில் இடும்போது பின்வரும் பிரார்த்தனை சொல்லப்படுகிறது.
“இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பாராக.புனிதமான இந்த உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும்.என் செயல்கள் நேர்மையானவையாக இருக்கட்டும்”
இவ்வாறு திலகம் இறைவனது நல்லாசியின் அடையாளமாக விளங்குவதுடன் தவறான இயல்புகளினின்றும் தீய சக்திகளிலிருந்தும் நம்மைக் காக்கும் ரட்சையாகவும் விளங்குகிறது.
நம் உடல் முழுவதும் மின்காந்த அலைகளாக சக்தியை வெளிப்படுத்துகிறது.நெற்றியும்,புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியும் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவை.(இது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள ஓஷொ என்ற ரஜனீஷ் அவர்கள் எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.உங்களின் தினசரி வாழ்வின் மீது முழுப்பிடிப்பு வந்துவிடும்.அந்த அளவிற்குப்பிரமித்துப்போவீர்கள்)

இதன் பொருட்டே
மனம் கவலையுறும் போது தலை உஷ்ணமடைந்து தலைவலி ஏற்படுகிறது.நெற்றியில் அணியும் திலகம் நெற்றியை குளிரவைத்து உடல் உபாதையிலிருந்து பாதுகாக்கிறது.நெற்றியும் புருவங்களிடையே உள்ள நுண்ணிய பகுதியின் மூலகாக நம்மை மற்றவர்கள் தன்வசப்படுத்தலையும்(மன வலிமை மிக்க மந்திரவாதியால் மயக்கப்படுவது) தடுக்கிறது.மேலும் உடலின் சக்தி வீணாகாமல் தடுக்கப்படுகின்றது.சில சமயங்களில் நெற்றிப்பகுதி முழுவதும் சந்தனம் அல்லது விபூதி(பஸ்மம்) பூசிக் கொள்வதும் உண்டு.
சில பெண்கள் ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட ஒட்டும் பொட்டுக்களை பலமுறை பயன்படுத்தலாம் என்பதும், இவை அலங்காரத்திற்கு மட்டுமே ஏற்றவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே.ஆனால் இவை திலகங்கள் போல பயன் தருபவை அல்ல.

No comments:

Post a Comment