Tuesday, May 17, 2011

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை. இந்த நேரம், தேவர்களும், பித்ருக்களும், ஒன்றுகூடும் நேரம்.காலையில் அவர்களை நினைக்க வேண்டும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டவேண்டும் என்று மனதில் தியானித்து கடமையை தொடங்கவேண்டும்.



அதிகாலை எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும்.உஷத்காலம் உஷஸ் என்னும் பெண்தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவளே விடியற்காலை நேரத்திற்கு உரியவள். இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.



உள்ளங்கையில் விழிப்பது:



காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது பலரது வழக்கம். உள்ளங்கையின் அடிப்பாகத்தில் பார்வதி தேவியும், மத்தியில் சரஸ்வதியும், மேல்புறத்தில் மகாலட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே காலையில் கண்விழித்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பதால் இந்த மூன்று தேவியரையும் தரிசித்த பலன் கிடைக்கும். அதனால் அன்றைய தினம் செய்ய வேண்டிய செயல் இனிதே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment