Wednesday, May 18, 2011

வாஸ்து சில முக்கிய அம்சங்கள்

வீட்டிக்குள் வாசல்கள் குத்தாக அமைவது நல்லதல்ல. வீட்டின் வெளிப்பக்கம் வாயிலின் அகலம் சாஸ்திரப்படி அமைக்க வேண்டும். வீட்டு வாசலின் எதிரில் கம்பமோ, மின்சாரம் பொருத்தும் அமைப்போ (டப்பா போல்), சாக்கடை அல்லது பள்ளமோ, தொட்டால் போல் சுவரோ, படிக்கட்டோ இருப்பது நல்லதல்ல. வாயில் உச்சஸ்தானத்தில் அமைக்கப்பட வேண்டும். தெற்குப் பக்கத்தில் கார் அல்லது ஸ்கூட்டர் ஏறச் சரிவு இருக்கக் கூடாது.



பிரதான கதவு நல்ல தேக்கு மரத்தினால் தயாரித்ததாக இருக்க வேண்டும். கதவுகள் சரியான இடத்தில் பொருத்தப்பட வேண்டும். ஒற்றைக் கதவுதான் பிரதான கதவுக்கு ஏற்றது. வீட்டிலுள்ள மற்ற கதவுகளைவிட பிரதான கதவு பெரிதாக இருக்க வேண்டும். எதிர் வீட்டின் பிரதான கதவின் நேராகத் தன் வீட்டின் பிரதான கதவு வராமல் இருக்கவேண்டும்.



கிழக்குத் திசையை நோக்கியுள்ள வீடுகளுக்கு மூன்று அல்லது நான்காவது பகுதியில் பிரதான கதவு அமைக்கப்பட வேண்டும். இதுவே தெற்குத் திசைக்கும் பொருந்தும். கதவு வடகிழக்குப் பகுதியில் மிகச் சிறந்தது



மேற்கு வாசல், சுமார்தான். ஆனால் வடமேற்கு மூலையில் தலை வாசல் அமைக்க நிம்மதி கிடைக்கும். மேற்கு வாசல் மனைக்குத் தெற்கில் அதிக இடம் விடக்கூடாது. வடக்கில் அதிக இடம் இருக்க வேண்டும். மேற்கு தலைவாசலைத் தவிர்த்து, முடிந்தால் வடகிழக்கில் தலை வாசல் அமைக்கலாம். அப்படி அமைத்தால் பல பிரச்சினைகள் மறைந்து போகும்.



தென் மேற்கில் தலை வாசல் கண்டிப்பாக இருக்க்கக் கூடாது. இது குடும்பத்திற்கு அதிக அளவு நன்மை செய்வதில்லை. மேற்கு வாசலில்

சூரிய உதயத்தைக் காண முடிவதில்லை. ஆனால் சூரிய அஸ்தமனம் காணலாம். பெங்சூயில் (சீனா வாஸ்துவில்) இதற்கு கிரிஸ்டல் கண்ணாடியைக் கதவில் புதைக்க சூரியாஸ்தமனச் சூட்டிலிருந்து காத்து அதன் எனர்ஜி அல்லது சக்தியை எல்லா இடங்களிலும் பரவ உதவுகிறது என்கிறார்கள்.



வடகிழக்கில் துளசி வைப்பதும் மல்லிகைச் செடி வைப்பதும் சிறந்தது என்கிறார்கள். இதனால் 'நெகடிவ் எனர்ஜி' மறைந்து விடுகிறதாம். பவழ மல்லிச் செடியும் வீட்டு வாசலில் வைக்க வாஸ்துவுக்குப் பரிகாரமாகிறது என்பது சிலரின் கருத்து. ருக்மிணி - சத்யபாமா புராணக் கதையில் இந்தப் பவழமல்லிச் செடி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தானோ வீட்டு வாசலில் இந்தச் செடியை வளர்க்கும் வழக்கம் வந்திருக்குமோ என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment