Friday, September 16, 2011

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் என்ன?

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பதன் பொருள் என்ன?

ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும். திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம். அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

* திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா?

அவசியம் செய்ய வேண்டும். நீங்களே தனியாகவும் செய்யலாம். பல சுமங்கலிப் பெண்களை
வீட்டிற்கு வரவழைத்தும் செய்யலாம். வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது போன்ற மங்களகரமான செயல் வேறு எதுவும் கிடையாது. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடியமர்ந்து விடுவாள்.

No comments:

Post a Comment