Friday, September 16, 2011

* ஒரே தெய்வத்தை வாழ்நாள் முழுவதும் வணங்கி வருவது சரியான முறைதானா?

** பிரதோஷ வேளையில் நரசிம்மரையும் வழிபடுவது விசேஷம் என்று பலர் கூறுகிறார்கள். உண்மைதானா?

பொதுவாக பிரதோஷ காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை கிடையாது. "நிருசிம்மம் ராகவம் விநா' என்பது சாஸ்திரம். அதாவது பிரதோஷ வேளையில் நரசிம்மரையும் ஸ்ரீராம பிரானையும் தவிர மற்றைய கோலங்களில் உள்ள ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஸேவிக்கக்கூடாது என்பது பொருள். மற்றபடி வழிபடுவதால் விசேஷம் என்றும் கூறப்படவில்லை. வைணவ சம்பிரதாயத்தில் வழக்கிலும் இல்லை.

* ஒரே தெய்வத்தை வாழ்நாள் முழுவதும் வணங்கி வருவது சரியான முறைதானா?

எல்லா தெய்வங்களையும் வணங்கலாமே. கோயிலுக்குச் சென்று பாருங்கள். எவ்வளவு விக்ரகங்கள் வைத்துள்ளார்கள் என்று. சமய வேறுபாடின்றி எல்லா தெய்வங்களும் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது எல்லோரை யும் வழிபட வேண்டும் என்பதால் தானே?

No comments:

Post a Comment