Friday, September 16, 2011

குலதெய்வம் என்பது எது என்றே தெரியாமல் தவிக்கும் என்னைப் போன்றோருக்கு தக்க வழிகாட்டி உதவுங்கள்?

குலதெய்வம் என்பது எது என்றே தெரியாமல் தவிக்கும் என்னைப் போன்றோருக்கு தக்க வழிகாட்டி உதவுங்கள்?

குலதெய்வ வழிபாடு என்பது நமது சந்ததியை அதாவது நம் குலத்தைக் காக்கும் தெய்வமாக பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது சாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஒரு சில புராணங்களில் குலதெய்வம் என்ற சொல் நேரடியாகவும், மறைமுகமாகவும் கையாளப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தினர் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக ஒரு தெய்வத்தை தமது குலதெய்வமாக வைத்து வழிபாடு செய்யத் துவங்குகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் பெருகி வேறு வேறு ஊர்களில் குடியிருந்து சில கால சூழ்நிலைகளில் அவர்களிடையே தொடர்பும் விட்டுப் போய்விடுகிறது. பின்வரும் உங்களைப் போன்றோர் குலதெய்வம் இன்னது என்று சொல்வதற்கு ஆளில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இருப்பினும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதே ஒரு நல்ல விஷயம். மூன்று வழிகளைக் கூறுகிறோம். எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
1) உங்களின் தந்தை வழி உறவு முறையில் உள்ள பெரியோர்களைக் கலந்து அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
2) ஜோதிடர்கள் அல்லது பிரஸன்னம் பார்ப்பவர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
3) உங்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் தெய்வங்களின் பெயர்களை சீட்டுகளில் எழுதிப்போட்டு ஒரு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்லி அதில் வரும் பெயருக்குரிய தெய்வத்தை மன சஞ்சலமில்லாமல் குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.

No comments:

Post a Comment