Monday, November 14, 2011

காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள் -10

தீபாவளியன்று காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்களைக் குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு.
""விசுவேசம் மாதவம் டுண்டிம்
தண்டபாணிம்ச பைரவம்
வந்தே காசீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம்''
விஸ்வநாதர், பிந்துமாதவர், துண்டிவிநாயகர், தண்டபாணி, காலபைரவர், காசி மாதா, வராஹி, புனித கங்கை, அன்னபூரணி, மணிகர்ணிகா தீர்த்தக்கட்டம் ஆகிய பத்தும் அவசியமாக தரிசிக்கவேண்டியவை. இதில் தண்டபாணி காசியின் காவல் தெய்வம். காலபைரவர் கோயிலில், காசிமாதா சந்நிதி உள்ளது. "குஹாம்' என்றால் வராஹி. காசிமாதா சந்நிதிக்கு மேற்கில் உள்ள குகையையும் குஹாம் என்பர். பத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது நல்லது. வரிசைப்படி தரிசிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த தரிசனத்துக்கு "நித்திய யாத்திரை' என்று பெயர்.

No comments:

Post a Comment