Monday, November 14, 2011

வியாதியின் பெயருடையவன் /அம்பாளின் பெயர் "சாட்சி'

கோர்ட்டில் தானே "சாட்சி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்! அம்பாளுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது எனக் குழம்ப வேண்டாம். சாட்சி என்பதை சமஸ்கிருதத்தில் "சாக்ஷி அல்லது சாக்ஷி' என்று உ<ச்சரிப்பார்கள். அன்னை பராசக்திக்கு "விச்வ ஸாக்ஷிணீ' என்ற பெயர் உண்டு. "விச்வம்' என்றால் "உலகம்'. "ஸாக்ஷிணீ' என்றால் "சாட்சியாக இருப்பவள்'. உலக மக்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் அவள் சாட்சியாக இருக்கிறாள். "ஸர்வதோக்ஷி' என்றும் அவளைச் சொல்லலாம். அதாவது எங்கும் தலையும், முகமும், கண்களும் கொண்டவள். இதையே கிராமமக்கள் "ஆயிரம் கண்ணுடையாள்' என்கின்றனர். இதனால், அவள் பார்வைக்கு தப்பி, எந்த ஒரு மனிதனும் எந்தச் செயலையும் செய்ய முடியாது. அவள் பார்க்கவில்லை என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மரணத்துக்குப் பின் அவள் முன்னால் நின்று தண்டனை பெறும்போது தான் இதை உணர்வார்கள்.



 
அழகான பெயர்களைத் தேடி எண்கணித நிபுணர்களைத் தேடி அலைவது இந்தக் காலம். ஆனால், அந்தக்காலத்தில் ஒரு அசுரன், வியாதி ஒன்றின் பெயரை தனக்கு வைத்திருந்தான். அவனது பெயர் "முயலகன்'. நடராஜரின் திருவடியின் கீழே ஒரு அசுரன் அழுந்திக்கிடப்பானே அவன் தான் இவன். அவனை முயலகன், முஸலகன், அபஸ்மார புருஷன் என்றெல்லாம் அழைப்பார்கள். "அபஸ்மாரம்' என்றால் "காக்கை வலிப்பு'. காக்கை வலிப்பு நோய் வந்தவனின் கைகளும், கால்களும் எப்படி இழுக்குமோ, அதே "போஸில்' நடராஜரின் காலடியில் படுத்திருப்பான் இவன். அதனாலேயே அப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள். கால்,கை வலிப்பு தான் "காக்கா வலிப்பு' ஆனது என்பது இன்னொரு கொசுறுத் தகவல்.

No comments:

Post a Comment