Friday, January 13, 2012

தவம்

ஞானம் பெற உதவுவது தவம். காவி உடுத்துவதும், காட்டிற்கு சென்று மூச்சடக்குதலும் தவமாகாது. காற்றை மட்டுமே உண்டு, ஒற்றைக்காலில் நெருப்பின் நடுவே நிற்றல் மட்டுமே தவமாகாது. இவை தவத்தின் வெவ்வேறு அடையாளங்களே.

ஐம்புலன்களை அடக்கல்

ஐம்புலன்களை அடக்கி உள்ளத்தை பரிசுத்தமாக வைத்து மனஅமைதியும், பொறுமையும் மேற்கொள்வதே ‘தவம்’ என்கின்றனர் முன்னோர்கள். தனக்கு வரும் துன்பங்களை மன அமைதியுடனும், பொறுமையுடனும், தாங்கிக்கொள்ளுதல், மற்றொரு உயிருக்கு துன்பம் செய்யாதிருத்தல், ஆகிய இருபண்புகளும் சேர்ந்த ஒரு பண்பே ‘தவம்’ ஆகும்.

தவமே சிவம்

வியாபாரம் செய்யும் வியாபாரிக்கு அதனால் செல்வம் பெருகும், விவசாயிக்கு வேளாண்மையால் தானியம் வரும். தானதர்மத்தால் புகழ் வரும். கல்வியால் அறிவு வரும், முறையான உணவினால் உடலுக்கு ஆரோக்கியம் வரும் ஆனால் தவத்தால் சிவம் வரும் என்கின்றனர் ஞானிகள்

No comments:

Post a Comment