Tuesday, June 19, 2012

முருகன் கோடிகோடி மன்மதர்களுக்கு ஈடானவன்


கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அதுதான் கோடி கோடி. முருகன் கோடிகோடி மன்மதர்களுக்கு ஈடானவன். அழகுக்குப் பெயரெடுத்தவன் மன்மதன். "என்ன மன்மதன்னு நினைப்போ!' என்று தான் பரிகாசம் பண்ணுகிறோம்.
அப்படிப்பட்ட கோடிகோடி மன்மதர்களின் அழகை ஒன்று சேர்த்தால் எவ்வளவு அழகாயிருக்குமோ அத்தனை அழகானவர் சுப்ரமண்யர்.
தமிழ் தேசத்துக்கு இவர் மீது ரொம்பப் பிரியம். தமிழ்த்தெய்வம் என்றே சொல்கிறோம். தமிழில் "வைதாரையும் வாழ வைப்பவர்' என்று அவரைப் போற்றுகிறோம். தமிழில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் "முருகன்' என்றே சூட்டியிருக்கிறோம். அழகு, அருள் இரண்டும் வேறு வேறில்லை. அழகே அருள் வடிவெடுத்து முருகனாக இருக்கிறார்.
சுப்பிரமணியரின் பெருமைகளில் மேலானது குருவாக உபதேசித்து மோட்சத்தைக் கொடுப்பது தான்.
""குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த'' என்று அருணகிரிநாதர் சொல்றபடி அப்பாவுக்கும் உபதேசம் செய்தவர். ""ஞானபண்டித ஸ்வாமி''யாக இருப்பவர். அவர் நமக்கு அழகு, அறிவு, அருள், வீரதீரம், சக்தி எல்லாம் நமக்கு அனுக்கிரஹம் செய்கிறார்.

No comments:

Post a Comment