Thursday, July 12, 2012

நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாகச் செய்வது பக்தி தான்.காஞ்சிப்பெரியவர்


மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிறபோது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவானால், செய்யும் செயல் நன்றாக இருக்கிறது. கோபம், வருத்தம், அழுகை, பொறாமை எல்லாம் மனதில் உண்டாகிற போது புத்தி குழம்பி விடுகிறது. அப்போது கொஞ்ச நாழி(நேரம்) சுவாமியை நினைத்துக் கொண்டீர்களானால் மனமும் புத்தியும் தெளிவாகி விடும். நாம் நல்லகுணத்துடன் இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம். பிறத்தியாருக்கும் சந்தோஷம். சின்ன பிள்ளைகள் பெரியவர்களான பின்னும் வாழ்வில் முன்னுக்கு வருவதற்கும் அது தான் உதவும். நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாகச் செய்வது பக்தி தான். சின்ன வயசிலிருந்தே சுவாமியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வயதாக வயதாக வேறு பல தினுசான ஆசைகள் எல்லாம் மனசில் முளைக்கத் தொடங்கிவிடும். அவை பக்தியை வளர விடாமல் இடைஞ்சல் செய்யும். பக்தியை வளர்த்துக் கொண்டவர்களுக்கு ஆசைகளும் உபத்திரவம் பண்ணாது. செடி எப்படி மரமாகி பலபேருக்கு நிழல் தருதோ, அதுபோல சின்னகுழந்தைகளும் பெரியவர்களாகிற போது பல பேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும். அதற்காக இப்போதில் இருந்தே அம்மையப் பனிடம் பக்தியோடு இருங்கள்.

No comments:

Post a Comment