Wednesday, October 3, 2012

வீட்டில்2 அடி விநாயகர் சிலை செய்து வைக்க ஆசைப்படுகிறோம். இதற்காக தனியாக சாஸ்திர விதிமுறைகள் இருந்தால் தெரிவிக்கவும்.

* ஆயுள் அதிகரிக்கவும், ஆரோக்கியம் உண்டாகவும் எந்தக் கடவுளை வழிபடவேண்டும்? பக்தனுக்காக (மார்க்கண்டேயன்)எமனையே அழித்தவர் என்பதால் சிவனுக்கு "மிருத்யுஞ்ஜயர்'(ஆயுளை அதிகரிப்பவர்) என்று பெயர் உண்டு. சோமவார விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரிபகவானை வழிபட்டால், எல்லா நோய்களையும் தீர்த்து, நிறைந்த ஆரோக்கியத்தை அருளுவார். * வீட்டில் 2 அடி விநாயகர் சிலை செய்து வைக்க ஆசைப்படுகிறோம். இதற்காக தனியாக சாஸ்திர விதிமுறைகள் இருந்தால் தெரிவிக்கவும். வீட்டில் பூஜை செய்வதற்கு ஆறு அங்குலத்திற்கு மேற்பட்ட விக்ரஹங்கள் கூடாது. பூஜை செய்பவர்களின் வலதுகையை முஷ்டியாகப் பிடித்து கட்டை விரலை மட்டும் உயர்த்தினால் ஏற்படும் உயர அளவே, வீட்டு பூஜைக்கு உகந்த விக்ரஹங்களின் அளவாகும்.

No comments:

Post a Comment