Monday, October 1, 2012

பாம்பாட்டி சித்தர்

பலவிதமான பாம்பை பிடிப்பது அவைகளின் விஷத்தை சேமித்து விற்ப்பது. இவைகளே ஆரம்பகாலத்தில் பாம்பாட்டி சித்தரின் தொழிலாகும் . இவர் விஷ முறிவு மூலிகைகளை பற்றி நன்கு தெரிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். ஒரு நாள் சிலர், மருத மலை மீது பெரிய நவரத்தின பாம்பு இருப்பதாகவும், அதன் தலையினில் விலை உயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதை பிடிப்பவன் பெரிய பாக்கிய சாலி என்வும் பேசிசென்றனர். இதனை கேள்விப்பட்ட பாம்பாட்டி_சித்தர் அதனை பிடிக்கவிரும்பி காட்டிற்குள் சென்றார். தீவிரமாக பாம்பை தேடினார். அப்போது திடீர் என்று பலத்த சிரிப்பொலி கேட்டுதிரும்பினார். அங்கே மிகபிரகாசமான ஒளியுடன் சட்டை முனி சித்தர் தோன்றினர் . "இங்கு எதை தேடுகிராய்?" என வினவினார். அதற்க்கு பாம்பாட்டியார் "நான் நவரத்ன பாம்பை பிடிக்கவந்தேன், அதை காணவில்லை" என்று தெரிவித்தார் . இதைகேட்ட சட்டை முனி சிரித்தார். "நவரத்தின பாம்பை உனக்குள் நீயே வைத்துகொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்றசெயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தை தர கூடிய ஒரு பாம்பு அனைவர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும்_அதை அறிவதில்லை. எனவே வெளியே திரியும் இந்தபாம்பை தேடுவதை விட்டு விட்டு, இல்லாத பாம்பைதேடி ஓடாதே" என்று கூறினார் .இவை அனைத்தையும் கேட்டு உண்மையினை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின்_காலில் விழுந்து வணங்கினார். சட்டைமுனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியாரை பார்த்து விளக்கம் தர தொடங்கினர். "அற்புதம் வாய்ந்த இந்தமனித உடலினுள் ஆதியிலிருந்தே குண்டலினி' என்ற ஒருபாம்பு படுத்துகொண்டு இருக்கிறது. தூங்கி கொண்டு இருக்கும் அந்தபாம்பு அறிவை குறைக்கின்றது . இதன் நுட்பத்தை அறிந்துகொள்வது அரிது. மக்களின் துன்பத்துக்கு மூலாகாரணமே இந்த மூலாதார பாம்பின் உறக்கம்தான். இறைவனை உணர பாடு படுபவர்களுக்கு சுவாசம்_ஒடுங்கும். அப்பொழுது 'குண்டலினி' என்ற அந்தபாம்பு விழித்தேழும். எனவே தியானம் சித்திக்கும். இறைவன்_நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனை காணும் இரகசியம்_இதுவே" என சொல்லிமுடித்தார். "குருதேவா! அரும் பெரும் இரகசி யத்தை உங்களால் இன்று தெரிந்துகொண்டேன் . மேலான இந்தவழியை விட்டு இனிநான் விலக மாட்டேன்!" என சொன்ன பாம்பாட்டியார், சித்தரை_வணங்கி எழுந்தார். சித்தர் அருள் புரிந்து விட்டு மறைந்தார்/. பாம்பாட்டியாரின் தொடர்யோக சாதனையினால் குண்டலினி யோகம் கை கூடியது. எல்லா வகை சித்துக்களும்_சித்தியானது. மக்களின் நோய்களை மூலிகைகளால் குனபடுத்தினர் . இவர் தவம்செய்த குகை மருத மலையில் உள்ளது . இவர் மருத மலையில் சித்தி அடைந்ததாக சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாக_சிலரும், விருத்தாசலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலுமே இவரது_நினைவிடம் உள்ளது.

No comments:

Post a Comment