Wednesday, October 3, 2012

நம' என்ற சொல்லுக்கு அர்த்தம்

புரட்டாசி சனியன்று "ஓம் நாராயணாய நம' என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம' என்ற சொல்லுக்கு "உனக்கே நான் உரியவன்' என்பது அர்த்தம். "ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன்' என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது"உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் "நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம்' என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ "ஓம் நமோ நாராயணாய' என்று சொல்வது பொருத்தமானது.

No comments:

Post a Comment