Thursday, November 29, 2012

கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசத்தில் வரகு தானியத்தைஏன் போடுகிறார்கள்?

** கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசத்தில் வரகு தானியத்தைஏன் போடுகிறார்கள்?
கோபுரகலசம் தெய்வசக்தியை வரவழைக்கும் ஆற்றல் உடையது. மூலஸ்தானக் கருவறையில் இருக்கும் தெய்வ விக்ரஹத்தின் சக்தியானது இதன் மூலமே பெறப்படுகிறது. இக்கலசம் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க அதனுள் வரகு தானியம் இடப்படுகிறது. அதாவது மிக உயரத்தில் இருக்கும் உலோகத்தால் ஆன கோபுர கலசத்தை மின்னல், இடி போன்றவை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வரகு, மின்னலின் சக்தியை செயலிழக்கச் செய்து விடும். இந்ததானியத்திற்கு இயற்கையாக இத்தன்மை உண்டு. கோபுரக்கலசங்களின் வாயிலாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட இடி தாக்காமல் பாதுகாக்கும்அரிய முறையினை நம் ஆன்றோர்கள் அக்காலத்திலேயே கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment