Thursday, November 29, 2012

வாழ்வில் எவ்வளவு கொடிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகத் தீர, நரசிம்மரை சுவாதியன்று வணங்கினால் போதும்

பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுக்கு அதிபதி "வாயு'. வேகமாகச் செல்வதில் நிகரற்றது காற்று. "வாயுவேகம் மனோவேகம்' என்று சொல்வர். இதயத்தில் எதை நினைத்தாலும், அந்தக் கணமே மனம் அங்கு சென்றுவிடும். ஆஞ்சநேயருக்கு "மாருதி' என்ற பெயருண்டு. இதற்கு "வாயுவின் பிள்ளை' என்று பொருள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு அதிதேவதை உண்டு. இதில் சுவாதிக்குரியவராக இருப்பவர் வாயு. பிரகலாதனுக்கு ஆபத்து நேர்ந்த சமயத்தில் இரண்யனிடம் இருந்து காப்பதற்காக புயலைப் போல பறந்து வந்தவர் நரசிம்மர். எனவே அவருக்குரிய நட்சத்திரமாகவும் சுவாதி அமைந்தது. வாழ்வில் எவ்வளவு கொடிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகத் தீர, நரசிம்மரை சுவாதியன்று வணங்கினால் போதும். அருள்புரிய பறந்து வருவார்.

1 comment:

  1. இல்லற பிரச்சனைகளில் தவிக்கும் எனக்கு உங்கள் செய்தி மன தெளிவை உண்டாகியது நன்றி

    ReplyDelete