Thursday, November 29, 2012

மந்திரமாவது நீறு'


பசுவின் சாணத்தை காயவைத்து நெருப்பில் இட்டு எடுக்கும் சாம்பலே திருநீறு. இதில் வாசனைப் பொருட்கள் சேர்க்கிறார்கள். இந்த ஒரிஜினல் திருநீறு கிருமிநாசினியாக செயல்பட்டு, உடலில் ஏற்படும் நோயைத் தீர்க்கிறது. இதைத் தொடர்ந்து பூசுவோருக்கு ஜலதோஷம் முதலியன ஏற்பட்டால் சுகமாகும். சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டால் திருநீறு பூசுவதுண்டு. வயிற்றுவலி வந்தால், கிராமமக்கள் சிறிது திருநீறை தண்ணீரில் கரைத்துக் குடிக்கிறார்கள். அடுப்பை எரித்துக் கிடைக்கும் சாதாரண சாம்பலை செடி, கொடிகளின் மீது தூவினாலே அதன் மீது ஊர்ந்து செல்லும் சிறுபூச்சிகள் இறந்துவிடும். இப்படியிருக்க, இறைவனுக்கு
மிகவும் பிடித்தமான பசுஞ்சாண சாம்பலைப் பூசினால், எவ்வளவு மகிமை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதன் பெருமையை, "மந்திரமாவது நீறு' என,ஞானசம்பந்தர் போற்றுகிறார்.

No comments:

Post a Comment