Thursday, November 29, 2012

சரஸ்வதிபூஜை - பொருள்

எளிமையான சரஸ்வதிபூஜை


ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதிபடம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். புத்தகங்களை மேஜையில் அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும். படத்தின் முன்னால் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வணங்க வேண்டும். குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை அவரவர் வசதிக்கு தக்கபடி வழங்க வேண்டும். மறுநாள், காலையில் புதுஇலை இட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி மட்டும் படைத்து பூஜை செய்து படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும். பூஜா என்றே சொல்லே பூஜை ஆனது. "பூ' என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது.

சரஸ்வதிபூஜை - பொருள்

பண்டிகைகளில் "பூஜை' என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் "பூஜா' என்பதில் இருந்து பிறந்தது. "பூ' என்றால் "பூர்த்தி'. "ஜா' என்றால் "உண்டாக்குவது'. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் "ஆணவம், கன்மம், மாயை' என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே "பூஜை'. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் "பூஜை' என்ற அடைமொழி இணைந்தது.


சரஸ்வதி பூஜையை ஒட்டி மாணவர்களுக்கு வாரியார் சுவாமிகள் தரும் சுவையான சேதி:
""கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக,'' என்பது வள்ளுவர் வாக்கு. படித்தால் என்ன லாபம்? சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லா நாடும் கற்றவருக்குச் சொந்தம். படிப்பது எதற்கு? உத்தியோகம் செய்வதற்கு மட்டுமல்ல, அறிவை வளர்ப்பதற்கும் கூட. திருக்குறள், ராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். வழுக்கி விழுந்தவள், வாழப்பிறந்தவள் போன்ற மோசமான கதைகளைப் படிக்கக்கூடாது. இனிமேலாவது, இதுமாதிரி உள்ள நல்ல நூல்களைப் படியுங்கள். படிப்பில்லாதவர்களும் பணம் சேர்க்கிறார்கள். உள்ளூர் பாங்கில் பணம் போட்டால் தெரிந்துவிடுமென்று வெளிநாட்டு பாங்கில் பணம் போடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வபக்தி இருக்க வேண்டும். காலையில் எழுந்து பல்துலக்கி, நெற்றிக்கு விபூதி இட்டு, இறைவனின் திருநாமத்தைச் சொன்னபின் தான் காபியே குடிக்க வேண்டும்''. வாரியார் சொன்னதை மனதில் வரித்துக் கொள்வீர்களா மாணவர்களே!

No comments:

Post a Comment