Thursday, November 29, 2012

சாய்பாபா சொல்கிறார்

 உங்களது மனதில் பக்திப்பூர்வமான எண்ணங்கள் வளரும் நாளே, எனது உண்மையான பிறந்த நாள்.
* துன்பங்களை சந்தித்தவர்களால் மட்டுமே, பிறரது துன்பங்களை அறிந்து கொண்டு, அவர்கள் மீது கருணை செலுத்த முடியும்.
* சமுதாயத்திற்கு செய்யப்படும் தீங்கு, நாட்டையும் பாதிக்கும். நாட்டின் நலன், சமுதாயத்தை முன்னிறுத்தியே இருக்கிறது.
* கடவுள் மீது பக்தி கொண்ட உலகம், பக்தி செலுத்தாத உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.
* யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பேசுவதைவிட, உரக்கப்பேசுவதே மேலானது (கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுவதே உயர்ந்தது).
* மனிதர்கள் மற்றும் நாடுகளுக்கிடையே சிறந்த நட்புறவை வளர்க்கும்படியாக அறிவியல் வளர்ச்சி பெற வேண்டும்.
* ஓய்வும், தூக்கமும் மனிதர்களுக்கு அவசியம். ஆனால், அவற்றையும் அளவாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.
* மகிழ்ச்சி துன்பங்களை போக்கும் மாமருந்தாக இருக்கிறது.
* மனம் எப்போதும் அறிவைச் சார்ந்திருப்பதில்லை. அறிவுதான் மனதைச் சார்ந்திருக்கிறது.
* பால், பழம், விதைகள் போன்ற உணவைச் சாப்பிடுங்கள். அவை நல்ல சிந்தனைகளைத் தரும்.
* எப்போதும் இறைவனைச் சார்ந்து, அவரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருங்கள். அதுவே மிகப்பெரிய தியானமாகும்.
* சேவை செய்வதை ஒரு வீடாகக் கருதினால் அதன் சுற்றுச்சுவராக உதவியும், மேற்கூரையாக தெய்வத்தன்மையும், வீட்டு உரிமையாளராக ஞானமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளமாக மனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வீட்டினால் பயன் ஏதுமில்லை.
* விருப்பங்களின் தொகுப்பே மனம். ஆனால், விருப்பமில்லாத மனம்தான் சுத்தமாக இருக்கும்.
* இறைவன், ஒவ்வொருவரிடமும் அமைதியின் மூலமாகவே பேசிக்கொள்கிறார். ஆகவே, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
* கடுமையாக உழைப்பவர்களுக்கு அதற்கேற்ப பலன் கிடைக்கும்.
* அன்பிற்கு மொழி கிடையாது. மொழிகள் புரியாத இடத்தில் அன்பினால் அனைத்தையும் சாதிக்கலாம்.
* இறைவன், உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்தைப்போல இருக்கிறார்.
* மனப்பூர்வமான பக்தியினால், இறைநிலையை யாராலும் அடைய முடியும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது.
* இல்லாதவர்களுக்கு உதவி செய்வதே, மிகச்சிறந்த நற்செயலாகும்.

No comments:

Post a Comment