Thursday, January 24, 2013

புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா?

செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும். மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும்.

மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும். புதனின் அருள் பெற, மருக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம்.

சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும். குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும். சுக்கிரன் அருள் பெற தெத்திப்பூ, செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சிக்கலாம்.

ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும். சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்கப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment