Thursday, April 11, 2013

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது சரியா?


பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது சரியா?

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது பழம் நம்பிக்கை. இன்னும் கூட சில கிராமங்களில் இந்நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நம்பிக்கை உண்மைதான்.

பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஹார்மோன் செயல்பாட்டினால் உடற்பாகங்களைப் போலவே அவர்களது தலைமுடியும் சற்று கூடுதலாகவே வளர்கிறது. இது குழந்தைப் பிறப்புக்குப் பின்பும் மூன்று மாத காலத்திற்குத் தொடரும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹார்மோன் செயல்பாடுகள் குறைந்து பழைய நிலைக்கு மாறும். இந்தக் காலத்தில் அவர்களுக்கு தலை முடி இயற்கையாகவே சிறிது உதிரத் தொடங்கும்.

குழந்தை பிறந்து மூன்று மாத காலத்திற்குப் பிறகுதான் சிரிக்கத் தொடங்கும். இதைக் கணக்கில் கொண்டுதான் மேற்கண்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பிறந்த குழந்தை தாயின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாலும் சிரிக்கா விட்டாலும் மூன்றுமாதத்திற்குப் பின்பு முடி கொட்டும் என்பதே உண்மை.

No comments:

Post a Comment