Thursday, May 30, 2013

சிவன் - விஷ்ணு விளக்கம்

சிவன் - விஷ்ணு விளக்கம்

சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் கூறுகிறார்: பெருமாள் கோவில்களில் தாயார் கிழக்கு பார்க்கிறாள். சிவன் கோவில்களில் அம்பாள் தெற்கு நோக்குகிறாள் .இதன் ஐதிகம் என்ன? சிவன் கோயிலில் சிவா பிரதிஷ்டை , உருவம் இல்லாமல் லிங்க பிரதிஷ்டைதான் இருக்கும்.''சிவனே'' என்று தனித்து இருப்பவர் அவர். அதனால் தனி சந்நிதிதான் இருக்கும்.அவர் கிழக்கே பார்த்தால் , அவருடைய இடப்பக்கம் அம்பாள் தெற்கே பார்த்தபடி இருப்பாள் .இரு சந்நிதிகளில் நிற்கும் போதும் இருவரையும் பார்ப்பது போல் அமையும்.அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்ப்பது போல் பிரதிஷ்டை செய்வது இல்லை. ஆகம விதிப்படிதான் இப்படி இருக்கிறது. இது ஐதிகம் இல்லை .இப்படி இருந்திருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள் என்பதுதான் ஐதிகம். இது ஐதிகம் இல்லை.ஆகம விதி.
விஷ்ணு ஷேத்திரத்தில் பகவான் கிழக்கே பார்த்திருப்பார். அவளும் பக்கத்திலேயே கிழக்கு பார்த்து இருப்பாள் . விஷ்ணு ஷேத்திரத்தில் லட்சுமியை மடியில் வைத்து அணைத்தபடி கூட விஷ்ணு காட்சி தருவார். '' நீ தியாகம் பண்ணினால் மோட்ஷம் கிடைக்கும்'' என்று சொல்வதற்காக சிவன் வந்திருக்கிறார். போகம் பண்ணி அனுபவிப்பதை விளக்க விஷ்ணு வந்திருக்கிறார்.அவர் தியாக ஸ்வரூபி . இவர் போக ஸ்வரூபி .அவர் தியாக ஸ்வரூபி என்றாலும் உடலிலேயே பார்வதியை வைத்திருக்கிறார். ஆனால் நாம் அர்த்தநாரியை பூஜிக்காமல் லிங்கத்தையே பூஜிக்கிறோம்

No comments:

Post a Comment