Wednesday, May 22, 2013

மாங்கல்ய தந்துனா''


மாங்கல்யம் -மஞ்சள்கயிறு.

மாங்கல்ய தந்துனா'' என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. "தந்து' என்றால் "மஞ்சள் கயிறு' என்று பொருள். "திருமாங்கல்ய சரடு' என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை "விதந்து'என்று குறிப்பிடுவார்கள். அதாவது "மாங்கல்ய கயிறு இல்லாதவள்' என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிற்றில்தானே தாலி கட்டப்படுகிறது. பின்னர் அவரவர் தம் வசதிக்கு ஏற்ப மாற்றம் செய்கிறார்கள்

No comments:

Post a Comment