Wednesday, June 19, 2013

குணம் !


வெற்றிக்காக எத்தகைய போர்க்குணம் வேண்டும் என்பதை தன் மாணவன் ஒருவனுக்குப் புரிய வைக்க நினைத்தார் குரு . உடனே, அந்த மாணவனை ஒரு குளத்துக்குள் மார்பளவு ஆழத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தார் . சட்டென்று, அவனுடைய தலையை தண்ணீருக்குள் பலம் கொண்ட மட்டும் அழுத்தினார் சில விநாடிகளில், குருவையே தள்ளிக் கொண்டு தண்ணீருக்கு மேலே வந்து, ' ஆளைக் கொல்வது போல இப்படி அழுத்துகிறீர்களே... உங்களுக்கு என்னவாச்சு ? ' என்று கேட்டான் மாணவன் கோபம் பொங்க .
குருவோ...' அழுத்தியது ஒருபுறம் இருக்கட்டும் . அதிலிருந்து நீ எப்படி விடுபட்டு வந்தாய் அதைச் சொல் ? ' என்றார் சாந்தமாக .
' மூச்சுத் திணறியதில் என் உயிரே போய்விடும் போல இருந்தது . அதான், முழு பலத்தையும் பிரயோகித்து வெளியில் வந்தேன் . இதிலென்ன அதிசயம் ? ' என்று பதிலளித்தான் மாணவன் .
' இத்தகைய தீவிரம்தான், எத்தகைய இரும்புக் கோட்டையையும் திறக்கும் சாவி ' என்று முடித்தார் குரு

No comments:

Post a Comment