Thursday, October 31, 2013

வசியத்திற்கு சீதேவி செங்கழுநீர் மூலிகை..!

 
வசியத்திற்கு சீதேவி செங்கழுநீர் மூலிகை..!

கோணவே சீதேவி செங்கழுநீர் வாங்க
சொல்லுகிறேன் மந்திரத்தைக் கேளு
...
மந்திரம் ஓம் ஸ்ரீம் லட்சுமிதேவி யென்று
மாறாமல் குருகுரு முன் நினைவாய் நீயே
அந்தரமாய் சொல்லியே ஆணி வேரை
அறாமல் பிடுங்கியதைத் தாமரை நூலால்

மந்திரமாய்த் திரியாக்கி வேருங் கூட்டி
இயல்பாகக் கபிலை நெய்யில் மை கூட்டி
தந்திரமாய்த் திலகமிட அரசரெல்லாந்
தாட்சியன்றி வசீகரமா இருக்குந்தானே

- கருவூரார் பலதிரட்டு ...


சீதேவி செங்கழுநீர் இம் மூலிகையை காப்புக் கட்டி, சாப நிவர்த்தி செய்து,"ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி குரு குரு சுவாஹ"என மந்திரம் செபித்து ஆணி வேர் அறாமல் பறித்து வந்து அதன் மேல் தாமரை
நூலால் சுற்றி காராம் பசு நெய்யில் திரி போட்டு எரித்து மையை சேகரித்து திலகமிட்டுக் (பொட்டு) இட்டுக் கொள்ள அரசரெல்லாம் வசியமாவார். அரசு சார்ந்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

No comments:

Post a Comment