Thursday, October 31, 2013

வெள்ளையந்தீவு என்ற புதிய தீவு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

வெள்ளையந்தீவு என்ற புதிய தீவு பற்றி கேள்விப்பட்டதுண்டா? இது எங்கிருக்கிறது என்று குழம்ப வேண்டாம்.
திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலையே "வெள்ளையந்தீவு' என்பர். இங்கு, ஆதிசேஷன் என்னும் பாம்புப்படுக்கையில்
ஸ்ரீதேவியும், பூமிதேவியும் பாதத்தை வருடிக் கொண்டிருக்க பெருமாள் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார். இந்த உலகில் நடக்கும் அனைத்தையும் அறிந்தபடி துயில் கொண்டிருப்பதே அறிதுயில். அசுரர்களால் துன்பம் நேரும் போதெல்லாம், தங்களைக்
காப்பாற்றும்படி தேவர்கள் பாற்கடலின் கரையில் நின்று பெருமாளிடம் சப்தமாக முறையிடுவர். அதனால், இதற்கு "கூப்பாடு கேட்கும் உலகம்' என்றும் பெயருண்டு.
வெள்ளையந்தீவுக்கு சென்று திருமாலைத் தரிசிக்கும்பேறு வேண்டுமானால், "எட்டு' எழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாய'
மந்திரத்தை மனதார உச்சரிப்பது தான் வழி.

No comments:

Post a Comment