Friday, January 31, 2014

துர்வாசரை விரட்டிய விஷ்ணு சக்கரம்!

ரகுவம்சத்தில் தோன்றிய கடைசி அரசர் அம்பரீசன். இவர் ஏகாதசி விரதத்தை தவறாமல் அனுஷ்டிப்பார். விரதம் முடிக்கும்போது, யாராவது ஒருவருக்கு அன்னம் அளித்தபிறகே சாப்பிடுவார்.
ஒருமுறை, யமுனைக்ரையில் துர்வாசமுனிவரைக் கண்டார். முனிவருக்கு அன்னம் அளித்து விட்டு, விரதத்தை நிறைவு செய்ய முடிவெடுத்தார். ஆனால், துர்வாசரோ, தனது அன்றாட பூஜையை முடித்து விட்டு, வருவதாகச் சென்றார். நேரம் சென்று கொண்டிருந்தது. துர்வாசர் வந்தபாடில்லை. ஏகாதசி திதி முடியும் வேளை நெருங்கியது. உணவேதும் சாப்பிடாமல், சாஸ்திரத்திற்காக கங்கா தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் முடித்தார் சிறிது நேரத்தில் துர்வாசர் வந்தார். அம்பரீசன் விரதம் முடித்ததை அறிந்து கோபம் கொண்டார். தன் தலையில் இருந்து ஒரு முடியை எடுத்து, மந்திரம் ஜெபிக்க அது பூதமாக மாறி, அம்பரீசனை கொல்லத் துணிந்தது.
உடனே திருமால், ஏகாதசி விரதமிருந்த தன் பக்தனுக்காக, சக்கரத்தை ஏவினார். அது நொடிப்பொழுதில் பூதத்தைக் கொன்றதோடு, துர்வாசரையும் விரட்டியது. பயந்து போன துர்வாசர் விஷ்ணுவைச் சரணடைந்தார். அவர், துர்வாசரிடம், அம்பரீசனிடம் சென்று மன்னிப்பு கேட்கும்படி கூறினார். துர்வாசரும் அவ்வாறே செய்ய, சக்கரத்திடம் இருந்து தப்பித்தார்

No comments:

Post a Comment