Saturday, February 22, 2014

உடம்பை வருத்து வது ஆன்மிகமா










நீங்கள் சொன்னபடி உடம்பு கேட்கிறதா? அல்லது உடம்பு சொன்னபடி நீங்கள் கேட்கிறீர்களா? உடம்பு, உங்களின் உண்மையான ஊழியனா? அல்லது கள்ளத்தனமான எஜமானனா?
உங்கள் உடம்பு, உண்மை ஊழியனாக உங்களது உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு... சுறுசுறுப்பாக, லகுவாக, ஒத்திசை வுடன் உங்களுக்கு ஒத்துழைத்தால், ஆனந்தம் உங்கள் வாழ்வில் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.
'விசையுறும் பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்'
என்று, சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி சொல்லால் தவம் செய்கிறார் மகாகவி பாரதி. ஒளி படைத்த இந்தியாவை உருவாக்க எண்ணி, தான் பாடிக் கொடுத்த புதிய ஆத்திச்சூடி யில், 'உடலினை உறுதி செய்' என்று உத்தரவும் போடுகிறார்!
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்கள், மாபெரும் அறிவாளிகளாக இல்லாவிட்டாலும், குடிமுழுகிப் போய்விடாது. ஆனால் அவர்கள், பலவீனமான நோயாளி களாக இருக்கக் கூடாது என்பதே என் முதல் அக்கறை; முன்னுரிமைச் சிந்தனை.
தன்னைப் பார்க்க வந்த பையன் பலவீனமாக இருக்கிறானே என்று, டானிக் எழுதிக் கொடுத்தார் மருத்துவர். பத்தே நிமிடத்தில் திரும்பி வந்த பையன், ''டானிக் மூடியைத் திறக்க முடியலை டாக்டர்... அதை திறக்கற அளவுக்கு சக்தி வர்ற மாதிரி ஊசி போடுங் களேன்'' என்றானாம்!
உடல்தான் ஆனந்தத்தின் ஆதார சுருதி. பழைய மரபு வழுவாத கோயில்களில், ஐந்து திருச் சுற்றுகள் (பஞ்ச பிராகாரம்) இருக்கும். இதில்
முதல் சுற்று- அன்னமய கோசம். அதாவது உண வால் உண்டான உடல்... ஸ்தூல சரீரம்!
பொதுவாக இந்த உடலை, 'அழியக் கூடியது... கிழியக் கூடியது.. சோற்றுத் துருத்தி... அழுகி நாறும் அருவருப்பானது' என்று சொல்லி விடுகிறார்கள் சமயவாதிகள். ஆனால், வாழ்வைத் துவக்குபவர்கள் இந்த மேற்கோள்களை

இவ்வளவு அவசரப்பட்டு அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
'உடல் கண்ணுக்குத் தெரியும் ஆத்மா. ஆத்மா கண்ணுக்குத் தெரியாத உடல்' என்று கவித்துவமாக பேசுகிறார் ஓஷோ. உடம்பை - கேவலமாக- தாழ்வாக நினைப்பது இயல்பு என்றாலும், அது நமது அறியாமை என்கிறார் திருமூலர். 'முன்னம் உடம்பை இழுக்கென்றெருந்தேன்' என்று தனது தவறுக்கு வருத்தம் தெரி விக்கிறார். பின்னர், 'உள்ளம் பெரும் கோவில்; ஊன் உடம்பு ஆலயம்' என்று கண்டுபிடித்தும் விட்டார்.
அதனால் அடுத்து கவனமாக,'உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே' என்று தன் தவறைத் திருத்திக் கொண்டதாக வாக்கு மூலம் தருகிறார் திருமூலர்.எனவே, உங்கள் உடம்பிடம் அன்பு காட்டுங்கள். அதைக் கொடுமைப்படுத்தாதீர்கள். உடம்பை வருத்து வது ஆன்மிகம் அல்ல. அதை பாதுகாப்பாக, கௌர வத்துடன் பராமரியுங்கள். அது, விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உன்னதமாகக் கட்டப்பட்ட மிகச் சிறந்த கோயிலை எவரேனும் இடித்தால், நீங்கள் சும்மா இருப்பீர்களா? உடம்பு, உன்னதமாக உருவாக்கப்பட்ட கடவுளின் கோயில். அதைச் சாட்டையால் அடிப்பது, ஊசிக ளால் குத்திக் கொள்வது, மண்டையில் தேங்காய் உடைப்பது... இவையெல்லாம் கோயிலை இடிக்கும் மோசமான செயல்கள்தான்.
உடம்பு எத்தனை உயர்ந்த கருவி தெரியுமா? ஒரு ரொட்டித் துண்டை வாயில் போட்டால், சில மணி நேரத்தில் அது ரத்தத்தில் ஒரு துளியாக மாறி விடுகிறது. எலும்பு, நரம்பு, மஜ்ஜை, கொழுப்பு, தோல் என்று பற்பல உறுப்புகளின் அடிநாதமாகிய சத்துப் பொருளாக அந்த ரொட்டி பிரித்தெடுக்கப்பட்டு, கூரியர் சர்வீஸ் மாதிரி அங்கங்கே அந்தந்த சத்துப் பொருளாகச் சேமிக்கப்பட்டு, சக்கை வெளியே தள்ளப்படுகிறது. இப்படியரு கருவியை மனித குலம் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கிறதா?
இப்படி... ஒரு முனையில் ரொட்டியாகப் போட் டால் மறுமுனையில் ரத்தமாக மாற்றும்படியான தொழிற்சாலை ஒன்றை, 45 மைல் சுற்றளவில், பல கோடி ரூபாய் செலவில் அமெரிக்காவில் அமைத் தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த தாகப் படித்திருக்கிறேன்.
நண்பர் ஒருவருக்குப் பார்வைக் கோளாறு. கண் மருத்துவமனைக்குச் சென்றோம். அன்று கண் மருத்துவர் ஊரில் இல்லை! வயதான அவரின் தந்தை, தட்டுத் தடுமாறியபடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார். என் நண்பருக்கு சொட்டு மருந்து ஊற்றி விட்டு, தம் வெற்றியைக் கொண்டாடும் விதம், 'மருந்து எப்படி இருக்கு?' என்று கொக்கரித்தார். என் நண்பரோ பீதியுடன், 'புளிப்பா இருக்கு' என்ற
படி வாயைத் துடைத்துக் கொண்டார்! ஒரு வழியாக சகல களேபரங்களும் முடிந்து, நண்பர் கண்ணாடி போட்டுக் கொண்ட போது கணக்குப் பார்த்தோம்... ஏழாயிரம் ரூபாய் செலவாகி இருந்தது! இப்படி கண்ணாடி போடும் அவசியம் உங்களுக்கு ஏற்படாமல் இருந்தாலே இந்தப் பணம் மிச்சம் ஆகும் என்பது புரிய வேண்டும். கண் மாதிரியே பல்! பல் வைத்தியரிடம் போனால்... பல்லையும் தட்டிவிட்டு, பில்லையும் நீட்டி விடுகிறார்!
கடவுள் நமக்கு இலவசமாக தந்துள்ள இரண்டு கிட்னிகளை விற்கத் தயார் என்றால், எத்தனையோ லட்சத்துக்கு ஏலம் எடுக்க பலர் தயாராக உள்ளனர் என்பதை அறிவீர்களா?
ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட பம்ப் செட்டு களை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடுகிறது ஆனால், நம் உடம்பில் 24 மணி நேரமும் ரத்தத்தை பம்ப் செய்யும் இருதய மோட்டார் வருடக் கணக்காக இடைவெளி இன்றி இயங்கிக் கொண்டே இருக்கிறதே! உடல் என்கிற இந்த உன்னதக் கருவியின் மேன்மை உணர்ந்து, 'உடலை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் மாதிரி எம்பிக் குதிக்க வேண்டாமோ?
உடலை வளர்ப்பது என்பது நிறைய தின்று கொழுகொழுவென்று இருப்பது என்று பொருள் படாது. நண்பர் ஒருவர், என்னை விட பரும
னாக இருப்பார். உடல் இளைக்க மருத்துவரை நாடினார். ''உங்களது இரவு உணவு என்ன?'' என்று கேட்டார் மருத்துவர். ''முழு சாப்பாடு... சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொறியல்... முடிந்தால் வடை, பாயசம்!'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் நண்பர்.
டாக்டர் கடுப்பாகி, ''ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி இப்படியா சாப்பிடுவாங்க? ரெண்டே ரெண்டு சப்பாத்தி சாப்பிடுங்க!''என்று கடிந்து கொண்டார்.நண்பரோ, துளியும் கவலையின்றி... ''ரெண்டு சப்பாத்திதானா? சரி... சாப்பாட்டுக்கு முந்தியா? பிந்தியா?'' என்று விளக்கம் கேட்டாரே பார்க் கலாம். டாக்டர் நொந்தே போனார்!
இப்படி உடலை வளர்ப்பதா ஆனந்தம்! 'விருந்தும் விஷம்... விரதமும் வேண்டாம்' என்ற நடுநிலை உணர்வே உடலைப் பேணும் ரகசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எட்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவர், அதை எப்படி வைத்திருக்கிறார்? எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே, அதன் மதிப்பு நிர்ணயம் ஆகிறது; கூடிக் கொண்டே போகிறது. அதுபோல, எண்சாண் உடம்பை வைத்திருக்கும் ஒருவர், அதை எப்படி வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அதன் மேன்மை நிர்ணயம் ஆகிறது.
திறமை மிக்க டிரைவர், தனது லட்சியத்தை எட்ட, தான் ஓட்டும் காரோடு ஒருபோதும் போராடுவதில்லை. அதை எவ்வாறு கொண்டு செலுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார். காரை, லாகவமாகக் கையாண்டும், அதிகமாக பராமரித்தும் தனது பயணத்தைச் சுகமாக்குகிறார். இலக்கை விரைவில் எட்டுகிறார். அதுபோல் கடவுளை நோக் கிய ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் விவேகிகள், தங்களது பயணம் சுகமாகவும் விரைவாகவும் அமைய உடலை எதிர்த்துப் போராடாதீர்கள். மாறாக, நன்கு பராமரியுங்கள்.
உணவைக் குறைப்பது குற்றமே அல்ல. ஆனால், தொடர்ச்சியாகப் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஒட்ட ஒட்ட கிடப்பது நல்லதல்ல. அதேபோல கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு, அளவுக்கு மீறி விருந்து உண்பதும் அறிவுடைமை ஆகாது. விரத காலங்களிலும் உடலில் உள்ள சர்க்கரைத் திறனுக்கு ஏற்ப பழங்கள், வெறும் வயிற்றில் நீர் அருந்திய பின் இளநீர், பானகம், பால் என்று (வெயில் மற்றும் மழைக்காலத்துக்கு ஏற்ப) திரவ உணவு கொள்வது விரதத்துக்குக் குறை ஆகாது.
சுரோணா என்ற அழகிய இளவரசன் திறமை மிக்க சிதார் கலைஞன். இவன், புத்தரிடம் சந்நியாசம் வேண்டி னான். 'அவன் போக நாட்டம் மிக்கவன். குடி, கூத்து, கும்மாளம் என்றே பொழுதைக் கழிப்பவன்... அவனுக்கு சந்நியாசம் தர வேண்டாம்' என்று சீடர்கள் தடுத்தனர். ஆனால், அவனுக்கு சந்நியாசம் தந்து விட்டார் புத்தர்.ஆனால், நிலைமை இப்போது தலைகீழ்... புத்தரின் துறவிகள் மூன்று ஆடைகள் வைத்திருக்கலாம் என்பது விதி. சுரோணா நிர்வாணமாக அலைந்தான். மற்ற துறவிகள் வெயிலில் சாலையில் நடந்தால், சுரோணாவோ கல்லிலும் முள்ளிலும் நடந்தான். மற்றவர்கள் ஓய்வெடுக் கும்போதும் இவன் வெயிலில் திரிந்தான். கொலைப் பட்டினி! எலும்பும் தோலுமாய்க் கறுத்து இளைத்து உடல் சுருங்கி விட்டான்! அன்புடன் அவனை நெருங்கிய புத்தர் ஒரு நள்ளிரவில் கேட்டார்: ''சிதாரின் நரம்புகள் இறுக்கமாக இருந்தால் அதில் இசை பிறக்குமா?''
''இல்லை, கம்பிகள் அறுந்து விடும்.''
''கம்பிகள் மிகவும் தளர்வாக இருந்தால் இசை பிறக் குமா?'' என்றார் புத்தர்.
''பிறக்காது... விரைப்பும் இல்லாமல் தளர்வும் இல்லா மல், நடுநிலையில் இருந்தால் மட்டுமே இசை பிறக்கும்'' என்றான் சுரோணா.
''இது உன் உடம்புக்கும் பொருந்துமே!'' என்றார் புத்தர்.
சுரோணா விழிப்படைந்தான்.
இது உங்களுக்கும் பொருந்தும்... யோசியுங்கள்!

No comments:

Post a Comment