Sunday, March 30, 2014

நலம் தரும் ராமநாமம்

நலம் தரும் ராமநாமம்

காசியில் பத்மநாபர் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார், அவர் இளம் வயதிலேயே வேதங்கள் உபநிடதங்கள், பிரம்மா சூத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார், இருப்பியம், இறைவனின் திருவருளைப் பெற வேண்டும் என்றால் குருவருள் மிகவு...ம் முக்கியம் என்பதை உணர்ந்திருந்த பத்மநாபர், கபீர் தாசரை சரணடைந்து அவரை குருவாக ஏற்றுக்கொண்டார், கபீர் தாசரும் பத்மநாபரை அன்புடன் ஏற்று அவருக்கு உபதேசம் செய்து வந்தார்.

தினமும் அதிகாலையில் கங்கைக்கு சென்று நீராடி, குருவிடம் உபதேசம் பெற்று அவருக்கு பணிவிடை செய்து இறைவனை தொழுவது பத்மனாபரின் வழக்கமாக இருந்தது., அன்றைய தினமும் அதிகாலையிலேயே எழுந்து கங்கை கரைக்கு சென்றார் பத்மநாபர், அப்போது கங்கை நதிக்கரையில் கூட்டமாக இருந்தது, ' என்றும் இல்லாத திருநாளாக இன்று என்ன இவ்வளவு கூட்டம்?' என்று எண்ணியபடி கூட்டம் இருந்த பகுதியைநோக்கி சென்றார் பத்மநாபர்.

அப்போது கூட்டத்தின் முன்பாக கங்கை நதியின் படித்துறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமர்ந்திருப்பதை பத்மநாபர் கண்டார். அந்த நபரைச் சுற்றிதான் இவ்வளவு கூட்டமும் திரண்டிருந்தது, அங்கிருந்த ஒருவரிடம் 'எதற்க்காக இப்படி கூட்டமாக நிற்கிறீர்கள்? என்று கேட்டார்.

'ஐயா! இவர் ஒரு பெரிய வியாபாரி, நல்ல மனமுடையவர், தான தருமங்கள் செய்வதிலும் சலிப்படையதவர் இவருக்கு அழகிய மனைவியும், ஐந்து பிள்ளைகளும் உள்ளனர். இருப்பினும் இவருக்கு கொடுமையான இந்த நோய் தாக்கி இருக்கிறது இதனால் மனைவியும் குழந்தைகளும் இவரை நெருங்கவே தயங்குகின்றனர், எனவே வேதனை தாளாமல் கங்கையில் மூழ்கி இறக்க முடிவு செய்து இங்கு வந்துள்ளார், அவரை நாங்கள் தடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூடியிருந்தவர்களில் ஒருவர் கூறினார்

பத்மனாபறம் அந்த வியாபாரியின் அருகில் சென்றார், ' அன்புடையவரே! மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிதானது. அதிலும் ஊனமின்றி இருப்பதும் , புத்திசாலியாகவும், செல்வந்தனாகவும், வாழ்வது கிடைத்தர்க்கரியது, செல்வந்தனாக இருக்கும் பலர் தானம் செய்ய முன் வருவதில்லை, இவ்வளவு நல்ல குணங்களையும் கொண்டுள்ள நீங்கள் தற்கொலை செய்ய எண்ணுவது தவறு. உங்கள் எண்ணத்தை கைவிடுங்கள்' என்று அறிவுரை வழங்கினர்.

ஆனால் துயரத்தின் உச்சியில் இருந்த வியாபாரி, 'சீழும், புண்ணுமாக அழுகிக் கொண்டிருக்கும் இந்த உடலை இன்னமும் காப்பாற்ற வேண்டுமா என்று வினவினார் !?

முற்பிறவிகளில் செய்த வினை நம்மை விடாது அதன் பயனை அனுபவித்தே தீர வேண்டும், இருப்பினும் வியாதியை நீக்க மருந்தைதேட வேண்டுமே தவிர உயிரை போக்கிக் கொள்ள நினைப்பது பாவம் என்றார் பத்மநாபர்.

அப்போது அங்கே கூடியிருந்தவர்கள், 'இவரது வியாதி நீங்க தகுந்த உபாயத்தை கூறி அருள வேண்டும்' என்று பத்மனாபரிடம் கேட்டுக் கொண்டனர்.

அதற்க்கு அவர், 'கங்கையில் மூழ்கி மூன்று முறை ராம நாமத்தை உச்சரியுங்கள்' என்று கூறி விட்டு, கங்கையில் நீராடச் சென்றனர்.

வி யாதியால் பாதிக்கப்பட்ட வியாபாரி, மெதுவாக தவழ்ந்து, தவழ்ந்து சென்று கங்கையில், மூழ்கினார், பின்ன்னர் உதடுகளை குவித்தபோது ஏற்ப்பட்ட வலியையும் பொறுத்துக்கொண்டு ,ராம, ராம, ராம என்று ராம நாமத்தை உச்சரித்தார்.

தண்ணீருக்குள் மூழ்கியவன் எவ்வாறு தன்னந்தனியாக எழுந்து மேலே வரப்போகின்றான் என்று கடையில் கூடியிருந்த அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த போது அந்த வணிகனின் உடல் புதுப் பொலிவுடன்
எந்த சிறு வெடிப்புக்கூட இல்லாமல் கங்கையில் இருந்து எழுந்து வந்தான்
கரையில் நின்றுகொண்டிருந்த பத்மநாபரின் காலில் விழுந்து வணங்கினான்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர், கபீர்தாசரிடம் தெரிவித்தனர், ககீர்தாசருக்கு, பத்மனாபரின் செயல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இருபினும், 'மகத்துவம் முகுத தான நாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டுமா? ஒரு முறை உச்ச்சரித்திருந்தாலே, அது தன சக்தியை வெளிப்படுத்தி இருக்குமே! என்று ஆதங்கமும் கொண்டார்.

இதுபற்றி தனது சீடரான பத்மனாபரிடமே, கபீர்தாசர் கேட்டார். அதற்க்கு அவர், 'குருதேவா! குரு முகமாக உபதேசம் ஏறாத குற்றம் நீங்க ஒருதடவை, தொழுநோய் நீங்க இரண்டாம் தடவை, அவன் ஞானம் பெற்று மோட்சம் அடைய மூன்றாம் முறை ராமநாமத்தை ஜெபிக்கச் சொன்னேன், நீங்கலாக இருந்தால் மூன்றையும் ஒரே தடவையில் செய்து முடித்து இருப்பீர்கள், என்னால் அது முடியுமா? என்று பணிவுடன் கூறினார்,

தன சீடர்களில் மிகவும் சிறப்புக்குரியவராக இருந்த பத்மநாபரை ஆராதழுவி
பாராட்டினார் கபீர்தாசர்

No comments:

Post a Comment